Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts
Showing posts with label மனுஷ்யபுத்திரன். Show all posts

Sunday, April 3, 2011

எழுதிச் செல்லும் நீருற்று - மனுஷ்ய புத்திரன்





இந்தியா டுடே 2011 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் மீண்டும் மனுஷ்ய புத்திரன்

இந்தியா டுடே வெளியிடும் தமிழகத்தின் 10 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் மனுஷ்ய புத்திரன் பெயர் இடம்பெற்றுள்ளது.. இதுபற்றிய இந்தியா டுடேயின் குறிப்பு இது.

தமிழ் மன்னர்கள்

தமிழகத்தை மைய அச்சாக கொண்டு உலகளாவிய அளவில் சாதித்துவரும் ஜாம்பவான்களின் பட்டியல் இது.

இந்த ஆண்டு இந்தியா டுடேவின் பலம் மிக்கவர்கள் பட்டியலில் தமிழக பலவான்கள் வரிசை கட்டி நிற்கிறார்கள். கடந்த ஆண்டைத் தொடர்ந்து இந்த ஆண்டும் டி.வி.எஸ் மோட்டார் வேணு ஸ்ரீனிவாசன் முதலிடத்தில் இருக்கிறார். முருகப்பா குழுமத்தின் ஏ. வெள்ளையன் அடுத்த இடத்தைப் பெற்றிருகிறார். தந்தைக்கும் தோள்கொடுக்கும் அப்ப்பல்லோ குழுமத்தின் ப்ரீத்தா ரெட்டி மூன்றாம் இடத்தில் இருக்கிறார். உலக சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் இந்தப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். தமிழக சிஐஐ யின் முன்னால் தலைவியும் சந்திரா குழும தலைவருமான நந்தினி ரங்க சாமி அடுத்த இடம் பெற்றிருக்கிறார். புது வரவாக நடிகர் விஜய் வந்திருக்கிறார். வாசன் ஐ கேர் நிறுவனத்தின் ஏ.எம் அருண், முன்னால் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த்’ நக்கீரன் கோபால், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆகியோரும் இதில் வலம் வருகிறார்கள்.


மனுஷ்ய புத்திரன்
42. கவிஞர், பதிப்பாளர், உயிர்மை

எழுதிச் செல்லும் நீருற்று

ஏனெனில்: இந்த வருடம் 50க்கும் மேற்பட்ட புத்த்கங்களை வெளியிட்ட இவரது பதிப்பகம் ஒரு சிறிய அணியை வைத்துக்கொண்டே பெரும் நிறுவன பதிப்பாளர்களோடு போட்டியிடும் அளவுக்கு வளர்ந்திருகிறது.

ஏனெனில்: ஒவ்வொரு மாதமும் சராசரியாக 10 கவிதைகளுக்கும் அதிகமாக கவித்துவம் குறையாமல் எழுதும் அளவுக்கு படைப்பாற்றலின் உச்சத்தில் இருக்கிறார்.

ஏனெனில்: மின் வெளியில் குவிந்து கிடக்கும் ’நானும் ரவுடிதான்’ ரக கவிதைகளுக்கு நடுவில் ரசிகர்கள் தேர்ந்தெடுத்துப் ப்போடும் மனுஷ்ய புத்திரனின் வரிகளே இணையத்தில் கவிதைக்கு மீட்சி கொடுக்கிறது.

ஏனெனில்: சினிமாவுக்கு பாடல் எழுதுவதற்காக இடதுசாரி இணைய தளங்களின் விமர்சத்திற்கு ஆளானாலும் இவரது சினிமா படைப்புகளில் கவித்துவம் இல்லாமல் இல்லை.

ஏனெனில்: கவிதையை வார்த்தை ஜாலத்தில் இருந்தும் படிமங்களில் இருந்தும் விடுவிக்கும் சூட்சுமத்தை வெளிக்காட்டும் சமகால கவிஞர் இவர்.

தனி ஆற்றல்: முகம் தெரியாதவர்களின் துயரங்களைக் கரைக்கும் சக்தி. கவிதை மூலமாகவும், நேரிலும், தொலை பேசியிலும்; தான் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்தாலும் கூட

சமீபத்தில் மகிழ்ச்சி: தனது ’இதற்கு முன்பும் இதற்கு பிறகும்’ கவிதை புத்தக விழாவில் தானாக முன் வந்து நூல்குறித்து எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது.

பெரிய திருப்தி: ரசிகமணி டி.கே.சி கடிதங்களின் முழுத் தொகுப்பை சிறப்பாக கொண்டு வந்தது.


நன்றி: இந்தியா டுடே
ஏப்ரல் 13, 2011



வாழ்த்துகள் மனுஷ்ய புத்திரனுக்கு

Thursday, March 25, 2010

அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும் - மனுஷ்ய புத்திரன் நேர்காணல்


“அதிகார எதிர்ப்பும் அட்டைக்கத்தி புரட்சியும்“ - மனுஷ்ய புத்திரன் 

நேர்காணல் : பொன்.வாசுதேவன்


மனுஷ்ய புத்திரனை அவரது நேர்காணல்களின் இரண்டாவது பகுதிக்காக மார்ச் ஆம்தேதி அவரது அலுவலகத்தில் மீண்டும் சந்தித்தேன்"விட்ட இடத்திலிருந்து தொடந்து பேசலாமா?" என்று கேட்டேன்"எந்த இடத்திலிருந்தும் தொடங்கலாம்" என்றார்.


பொன் வாசுதேவன் :


சாருவை உயிர்மை அளவுக்கு மீறி கவனப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


நான் திரும்பத் திரும்பச் சொல்லி வந்திருக்கிறேன், என் நண்பர்களுக்காகத்தான் நான் இந்தப் பத்திரிகையை நடத்துகிறேன் என்று.தமிழ்ச் சூழலை உய்விப்பதோ அல்லது எல்லாவற்றையும் நாங்கள்தான் பிரதிநிதித்துவப்படுத்துகிறோம் என்று நாடகமாடுவதிலோ எனக்கு அவ்வளவு ஈடுபாடில்லைசாருவின் அபிப்ராயங்கள்அணுகுமுறைகள் தொடர்பான எனது மாறுபட்ட அபிப்ராயங்களை நான் திரும்பத் திரும்ப எழுதியிருகிறேன்கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதிக்கு நான்இந்தியா டுடேயில் எழுதிய மதிப்புரையைப் போல சாருவைத் தவிர வேறு யாருக்கும் எழுதினால் அவர்கள் ஜென்மத்திற்கும் என் முகத்தில் முழிக்க மாட்டார்கள்ஆனால் அவர் தொடர்ந்து என்னிடம் நட்பு பாராட்டினார்இதெலாம் உயிர்மைக்கு முந்தைய கதைஆனால் அவரைச் செயல்படவிடாமல் தடுப்பதன் மூலமாக அவரை இல்லாமல் ஆக்க யாரும் நினைத்தால் நான் சாருவின் பக்கம் நிற்பேன்பரஸ்பரம் கொண்டாடவும் கடுமையாக மறுத்துக் கொள்ளவும் ஒருவன் வேண்டாமாதமிழ்ச்சூழலில் மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு எழுத்தாளர் என்றால் அது சாருதான்அதுகூட ஒருவிதமான மொண்ணையான பிரச்சாரத்தால் உருவாக்கப்பட்டதுதமிழ் இலக்கியச் சூழலின் விழிப்பு நிலையினை உருவாக்கியதில் அவருடைய பங்கு முக்கியமானதுபொலிடிக்கல் கரெக்ட்னெஸ்சிற்கு எதிராகடிப்ளமசிக்கு எதிராகப் பேச ஒரு ஆளாவது வேண்டாமாஇன்றைக்கு என்னை மகாகவி என்று எழுதுவார்நாளை என்னைத் தலைகுப்புறக் கவிழ்க்கவும் செய்வார்இது ஒரு முரண்பாடு அல்லநாம் வெவ்வேறு ஆளுமைகளாக சிதறுண்டு போயிருக்கிறோம்இதில் பிம்பங்களை உருவாக்குவது அபத்தம்பிம்பங்களைக் கலைத்து அடுக்குவதும் அதனோடு விளையாடுவதும்தான் இன்றைய பின் நவீனத்துவ உலகில் சாத்தியம்சாரு அதைத்தான் செய்கிறார்இதற்காகத்தான் அவரை நான் நேசிக்கிறேன்அறிவுசார்ந்த துணிச்சல் இல்லாதவர்களால் இதைத் தாங்கவோ புரிந்துகொள்ளவோ முடியாது.


அவர் அடைந்த இடம் என்பது அவரின் எழுத்துக்கள்வழியே அடைந்தது. உயிர்மை அதற்குச் சிறிதளவு பயன்பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.


உயிர்மையின்மீது பொதுவாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அது அரசியல் அதிகார மையத்தை நோக்கித் தொடர்ந்து நகர்ந்துகொண்டிருக்கிறதுஅது சார்ந்த செயல்பாடுகளை முன்னிறுத்துகிறது என்று சொல்லப்படுகிறதுஇது ஒரு இலக்கியச் சூழலில் செயல்படும் பத்திரிகைக்குப் பொருத்தமானது என்று நினைக்கிறீர்களா?


மனுஷ்ய புத்திரன் : வாசுதேவன்இதை நான் உங்கள் கேள்வியாக எடுத்துக்கொள்ளப் போவதில்லைஒரு நபர் தொடர்ந்து வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு மாதாமாதம் தன் பத்திரிகையில் அழுவதைத் தாங்கமுடியாமல்தான் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள் என்று சந்தேகமாக இருக்கிறதுஉயிர்மை அதிகாரத்தின் அடிவருடி.அவர் அதிகாரத்திற்கு எதிரான போராளிஇதை நிறுவுவதற்காக அவரும் அவரது ஊழியர்களும் உயிர்மையையும் அதன் எழுத்தாளர்களையும் வசைபாடி வசைபாடி வைக்கும் ஒப்பாரியைப் பார்த்தால் எனக்கே கண்ணீர் வருகிறதுஇந்தத் துன்பத்திலிருந்து இந்த நபரை விடுவிப்பதற்கு நான் செய்யக்கூடியது எதுவும் இருந்தால் நிச்சயம் செய்வேன்.


ஒருவர் தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டது என்று அதிகாரத்திற்கு எதிரான புரட்சியாளராக மாறுவது சாத்தியம் என்றால் வேறு சில அற்பக் காரணங்களுக்காக ஒருவர் அதிகாரத்தின் அடிவருடியாகவும் மாறுவது சாத்தியம்தான் இல்லையா?. நமது அட்டைக்கத்தி கோமாளி புரட்சியாளர் சிந்திக்கவேண்டும்.


தனக்கு நூலக ஆணை மறுக்கப்பட்டதைப் பற்றிப் பேசும் கோமாளிப் புரட்சியாளர் யார் மூலமாக அந்த நூலக ஆணை தனக்குக் கிடைத்தது என்பதையும் வெளிப்படையாகச் சொல்லவேண்டும்நூற்றுக்கணக்கான சிறுபத்திரிகைகள் வெளிவரும் சூழலில் தனது பத்திரிகைக்கு மட்டும் அந்த ஆணை கிடைத்தது உரிய வழிமூலமாகத்தான் என்று அவர் சொல்லத் துணிவாரென்றால் அவரது நிழல்கூட அவரைக் காறித் துப்பும்.அன்று கனிமொழி உதவினார்அதனால் அவரது முதல் நாடாளுமன்ற உரை அவசர அவசரமாக மொழி பெயர்க்கப்பட்டு அந்தப் பத்திரிகையில் வெளியிடப்பட்டதுஇப்போது கனிமொழி உதவ வில்லைஅதனால் அவர் கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்.


ரவிக்குமாருக்கும் நடந்தது அதுதான். அவர் அந்தப் பத்திரிகையின் உடன் இருந்தது அதன் சாதிய அடையாளங்களை மறைக்கப் பயன்பட்டதுஅவரது முதல் சட்டமன்ற உரை ஆரவாரத்துடன் வெளியிடப்பட்டதுஇப்போது அவர் உடன் இல்லை என்றதும் கோமாளிப் புரட்சியாளர் ரவிக்குமார் மேல் விழுந்து பிராண்டுகிறார்.


'தமிழச்சி தங்கபாண்டியன் இன்னொரு பிராண்டல் இலக்கு. நமது புரட்சியாளர் நடத்துகிற மாநாட்டில் தமிழச்சி நாடகம் நடித்து சுந்தர ராமசாமியின் பிரதிகளை நிகழ்கலையாக நடத்தினால் அவரிடம் போய் எங்கள் இணைய இதழுக்கு ஆசிரியராக இருங்கள் என்று கெஞ்சலாம்.அவர் தங்கள் எல்லைக்குள் இல்லை என்று தெரிந்ததும் அவரை நோக்கி அதிகார மையம் அதிகார மையம் என்று கூப்பாடு போட்டுப் பிலாக்கணம் வைக்கலாம்.


எழுத்தாளர் இமையம் வரை இந்த வரலாறு தொடர்கிறது. தங்கள் வட்டத்திற்குள் யார் இருக்கிறார்கள்இல்லை என்ற அடிப்படையில்தான் கோமாளிப் புரட்சியாளரின் அட்டைக் கத்தி புரட்சிகள் தொடங்குகின்றன.கனிமொழிரவிக்குமார் போன்ற வெகுசன அரசியல் அடையாளம் கொண்டவர்களின் பெயர்களைத் தம்மோடு இணைத்துக்கொண்டு ஆதாயமடையலாம் என்று கனவுகண்டது யார் என்பதைத் தமிழ் வாசகர்கள் நன்கறிவார்கள்அந்தக் கனவு நிறைவேறாது என்று தெரிந்ததும் இப்போது அதிகார எதிர்ப்பு அரசியல்.


அதிகாரம், அதைப் பயன்படுத்தி விருதுகள் பெறுவது பற்றியெல்லாம் அவர் தொடர்ந்து எழுதி வருகிறார்சல்மா எந்த அரசியல் தகுதியின் அடைப்படையில் இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பினை அடைந்தார் என்பதைக் கோமாளிப் புரட்சியாளர் எழுதலாமே.அசோகமித்திரனும் ஞானக்கூத்தனும் இந்திரா பார்த்தசாரதியும் எஸ்.ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் சாரு நிவேதிதாவும் அ.மார்க்ஸும் போன்ற சர்வதேச இலக்கியத்தோடு தொடர்புகொண்ட பல எழுத்தாளர்கள் வாழக்கூடிய ஒரு சூழலில் இவர்களை எல்லாம்தாண்டி குறைந்தப்பட்ச தொடர்பியல் மொழிகூட இல்லாத சல்மா ஜெர்மன் புத்தகக் கண்காட்சிக்கு அழைக்கப்பட்டாரே அது எப்படி என்றோ,இன்றளவு அவர் மேற்கொண்டுவரும் உலகப் பயணங்கள் எந்த அடிப்படையில் நிகழ்கின்றன என்றோ நமது அதிகார எதிர்ப்பாளர் துணிச்சலாக எழுதலாமேஎழுத முடியாதுகோமாளிப் புரட்சியாளரின் இரட்டை நாக்கு வேறு வேறு திசைகளில் நகரக்கூடியது.


உண்மையில் எனக்கு அதிகார மையத்தைச் சேர்ந்த என் நண்பர்களை இப்படியெல்லாம் பயன்படுத்தவேண்டிய அவசியமோ, எனது நோக்கம் நிறைவேறாதபோது அவர்களை வசைபாடவேண்டிய மனப் பிராந்தியோ எதுவும் இல்லை.


சிறுபத்திரிகையோடு தொடர்புடையவர்கள் அதிகார மையதிற்கு நெருக்கமாகச் செல்லும்போது எவ்வளவு ஆபத்தானவர்களாக மாறுகிறார்கள் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன்.உயிர்மையை அழிப்பதையே தனது வாழ்நாள் லட்சியமாகக் கொண்ட ஒரு உலக இலக்கிய இதழை நடத்தும் ஆசாமியின் நண்பர்கள் இருவர் ஒருமுறை நூலகத் தேர்வுக் குழுவில் இடம்பெற்றார்கள்உயிர்மை அந்த ஆண்டு விண்ணப்பித்திருந்த அத்தனை நூல்களுக்கும் எதிராக அவர்கள் தங்களது குறிப்புகளை எழுதிவைத்தார்கள்உயிர்மையின் முதுகெலும்பை அதன் மூலம் முறிக்கலாம் என்று நினைத்தார்கள்.வேறு ஒரு நண்பர்மூலம் இதை அறிந்தேன்அடுத்த நாள் அந்தக் குறிப்புகள் அனைத்தும் குப்பைக்கூடைக்கு அனுப்பப்பட என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்தேன்அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்றால் என்னவென்பதை அவர்களுக்கு வேறு வழியில் காட்டினேன்.


இன்று உயிர்மையோடு சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் சிலர் அரசியல் தொடர்புடையவர்கள் எனில் அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். மற்ற எழுத்தாளர்கள் தங்கள் நூல் வெளியீட்டுக் கூட்டங்களுக்குத் தமக்கு உவப்பான எழுத்தாளர்களை அழைப்பது போல சில சமயம் அரசியல் தலைவர்கள் அழைக்கப்படுகிறார்கள்இதில் உயிர்மைக்கு எந்த ஆதாயமும் கிடையாதுகுறுக்கு வழியில் உயிர்மை எந்த ஆதாயத்தையும் நாடிப்போனது கிடையாது.

இலக்கிய மாநாடுகளை நடத்தி தமிழ்நாட்டில் முதன்முதலாகப் பெரும்கூட்டத்தைக் கூட்டியவர்கள் நாங்கள்தான் என்று பெருமையடித்து வந்த நமது கோமாளிப் புரட்சியாளர் இன்று அந்தச் செல்வாக்கு வேறு நபர்களிடம் போய்விட்டதைப் பார்த்து மண்ணில் விழுந்து புரண்டு அழுகிறார். இலக்கியக் கூட்டங்களில் பெரும்கூட்டம் கூடுவதைப் பற்றிப் புலம்பி இந்த வெள்ளத்தில் சிறிய விஷயங்கள் அடித்துச் செல்லப்படுவதைப் பற்றிக் கண்ணீர் விடுகிறார்இதே குற்றச்சாட்டு இதற்கு முன்பு தன்மீதும் தன் பத்திரிகைமீதும் வைக்கப்பட்டபோது அதை எப்படிக் கேலியும் கிண்டலும் செய்தார் என்பது அவருக்கு மறந்துபோய்விட்டதுஅப்துல் கலாமை தான் நடத்திய கூட்டத்திற்கு நமது கோமாளிப் புரட்சியாளர் வரவழைத்தது அப்துல் கலாம் அதிகார மையத்தைச் சேர்ந்தவர் என்பதால் அல்லஅவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதால் என நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்அப்துல் கலாம் தனது பத்திரிகை பற்றிச் சொன்ன பொன்மொழி ஒன்றைத் தனது விளம்பர வாசகமாகப் பயன்படுத்தியது அந்த வாசகத்தைச் சொன்னவரின் பெயரை வணிக நோக்கில் பயன்படுத்துவதற்காக அல்லஅந்தக் கருத்தின் ஆழத்திற்காகத்தான் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


தீப்பொறி ஆறுமுகம் அ.தி.மு.க வில் சேர்ந்தபோது கலைஞர் தன் மகனுக்கு வேலை வாங்கிக் கொடுக்க மறுத்துவிட்டார் என்று அதற்குக் காரணம் கூறினார்நமது அட்டைக் கத்தி புரட்சியாளரின் அதிகார எதிர்ப்பும் கிட்டத்தட்ட இதற்குச் சமமானதுதான்.


நான் கனிமொழி போன்றவர்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்வது இதுதான். இவர் இன்று போடுகிற அதிகார எதிர்ப்பு நாடகங்களை உண்மை என்று நம்பி இவருக்கு எதிராக எதுவும் செய்துவிடாதீர்கள்உங்கள் உடன் இருக்கும் யாராவது சிறுபத்திரிகை ஆசாமிகள் அப்படிச் செய்யுமாறு உங்களைத் தூண்டுவார்கள்அதற்குப் பலியாகிவிடாதீர்கள்பிறகு அதற்கும் சேர்த்துப் புரட்சியாளர் அடையாளத்தை claim பண்ண ஆரம்பித்துவிடுவார்தமிழ் வாசகர்கள் ஏற்கனவே நானும் ரவுடிதான்’ என்ற கூச்சலைக் கேட்டு போரடித்துப் போயிருக்கிறார்கள்மேற்கொண்டு அவர்களால் தாங்க முடியாது.


உயிர்மை தனது வியாபார நோக்கங்களுக்காக சர்ச்சைகளைச் தொடர்ந்து உருவாக்குகிறது, ஊக்குவிக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப் படுகின்றனவே?


தெருவில் ரெண்டுபேர் சண்டை போட்டுக்கொண்டால் அதைக் கூடி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் ஒரு கட்டத்தில் தங்களுக்காகத்தான் அந்தச் சண்டை நடக்கிறது என்று நம்ப ஆரம்பிப்பது போன்றதுதான் இது. சண்டை போடுகிறவனுக்கு ஒரூ நோக்கம் இருக்கிறதுவேடிக்கை பார்ப்பவனுக்கு எந்த நோக்கமும் இல்லைதன் நேரத்தையும் மனதையும் அழித்துக் கொள்வதைத் தவிரஇரண்டு எழுத்தாளர்கள் சண்டை போட்டுக் கொண்டால் அவர்கள் புத்த்கம் விற்குமாகேளிக்கை நாடி இந்தச் சண்டைகளை விரும்பிச் சுவைப்பவர்களும் புத்தகம் படிப்பவர்களும் வேறு வேறு வர்க்கம்.


ஒரு எழுத்தாளன் அல்லது ஒரு பதிப்பகம் ஒரு சூழலில் பெறும் முக்கியத்துவத்தின் காரணங்கள் ஆழமானவை. அவை உழைப்பிலிருந்தும் அறிவார்ந்த ஒழுங்கிலிருந்தும் பிறப்பவைஇது இல்லாதவர்கள இதைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள் சர்ச்சைகளினால் வியாபாரம் நடக்கிறது என்று எழுதுகிறார்கள்.. வித்தை காட்டி காசு வாங்கும் மோடி மஸ்தானையும் தமிழ் எழுத்தாளனையும் ஒன்றாகக் கருதும் ஆட்கள் இருக்கும் வரை இத்தகைய குற்றச்சாட்டுகள் எழத்தான் செய்யும்.


ஒழுக்கம் சார்ந்த கருத்துக்களை நிர்மூலமாக்குவதன் வழியே தங்கள் படைப்பினை முன்வைக்கும் படைப்பாளிகளின் பார்வை சரியான ஒன்றா?


அப்படிப்பட்ட படைப்பாளிகள் யாரும் தமிழில் இருக்கிறார்களா என்ன?எனக்குத் தெரியவில்லைநீங்கள் சுகிர்தராணியையும் லீனா மணிமேகலையையும் உதாரணமாய் வைத்து இந்தக் கேள்வியை கேட்டு என்னை காமெடி பண்ணமாட்டீர்கள் என்று நம்புகிறேன்இலக்கியம் எப்போதுமே பிறழ்வுகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ பேசுகிறதுசீதையின் மேல் ராவணன் கொள்ளும் காதல்லஷ்மணனின் மேல் சூர்ப்பனகை கொள்ளும் காதல்வாலி தன் தம்பி சுக்ரீவனின் மனைவி தாராவின் மேல் கொள்ளும் இச்சை இதெல்லாம்தான் ராமாயணம்.


மகாபாரதத்தில் ஐவருக்கு மனைவியாக வாழும் பாஞ்சாலி, அவளைச் சபையில் துகிலுரியும் துரியோதனன்கர்ணனின் பிறப்பின் மர்மம் இதெல்லாம்தான் மகாபாரதம்.

நமது மாபெரும் காப்பியம் சிலப்பதிகாரம் கடைசியில் ஒரு ஆண்,இரண்டு பெண் என்ற பாலியல் கதைதானேநம்முடைய மரபில் எதைப் பார்த்தும் யாருக்கும் எந்த அதிர்ச்சியும் கிடையாதுஅதிர்ச்சி என்பது போலியான சமூகப் பாசாங்கு.


சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஒரு கவிதையில் நாலு இடத்தில் யோனி என்ற வார்த்தையையோகுறி என்ற வார்த்தையையோ பயன்படுத்தினால் உடல் மொழியையும் பாலியலையும் எழுதிவிட்டோம் என்று உரிமை கோருகிறார்கள்இதைவிட சுலபமானதுஒரு பெண் குறியின் அல்லது ஆண்குறியின் புகைப்படத்தைப் பிரசுரிப்பது.


தமிழில் மொனியும் கு..ராஜகோபாலனும் லா..ராமாமிருதமும் ஜானகிராமனும்தான் உண்மையில் பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் எழுத்தாளர்கள்அவர்கள் அதைப் பற்றிய ஆழமான படிமங்களையும் மனச் சித்திரங்களையும் உருவாக்குகிறார்கள்.


மாறாக, வேசிகளைப் பற்றி எழுதிய ஜிநாகராஜனின் எழுத்துக்கள் எதுவும் பாலியல் சார்ந்தது அல்லஇதையெல்லாம் புரிந்துகொள்ளாமல் சும்மா புணர்ச்சி புணர்ச்சி என்று எழுதுபவர்கள் அந்தச் சொல்லைக் கல்லில் அழுத்தி தேய்கிறார்களே ஒழியஅந்தச் சொல்லின் பரவசத்தை அவர்களால் நெருங்கக் கூட முடியவில்லைஉண்மையில் பெரும்பாலான நவீன எழுத்தாளர்கள் பாலியல் குறித்த வக்கிரத்தையோ ஏக்கத்தையோதான் எழுதுகிறார்களே தவிர அதன் பரவசத்தைஅதன் மனோ விசித்திரங்களை அவர்களுக்கு எழுதத் தெரியாது என்பதுதான் என் அபிப்ராயம்.


விந்தும் மாதவிடாய் குருதியும் பற்றிய வெற்றுச் சித்திரங்களை தமிழில் பாலியல் இலக்கியங்கள் என்றோ ஒழுக்க மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்கள் என்றோ நாம் அறிவித்துக்கொண்டால் நாம் பைத்தியம் இல்லையா? பெரும் மேதமைகொண்ட ஒரு எழுத்தாளனே மதிப்பீடுகளைக் குலைக்கும் எழுத்துக்களை எழுத முடியும்.இலக்கியத்திற்குள் ஷாப்பிங் செய்பவர்கள் எல்லாம் தமிழில் கலக எழுத்தாளர்களாக மாறிவிட்டார்கள்இதுதான் இந்த மொழிக்கு நேர்ந்த பெரும் அவமானம்.


நவீன தமிழ்க் கவிதையின் பொதுவான பண்புகளை நீங்கள் உடைத்திருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கும் பிரத்யேகமான நடை நீங்கள் திட்டமிட்டு உருவாக்கிய ஒன்றா?


அதைத் திட்டம் என்று சொல்வதைவிட ஒருவிதமான கண்டுபிடிப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு எழுத்தாளனும் இத்தகைய கண்டுபிடிப்பு முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டிருக்கிறான்அது ஒரு தங்கவேட்டை.சிலருக்கு அது வசமாகிறதுநான் என மன அமைப்பிற்குத் தகுந்த ஒரு மொழிக் கட்டுமானத்தைச் சிறிது சிறிதாக உருவாக்கி வந்திருக்கிறேன்.அதுகூட வெளிப்பாட்டின் சவால்களை எதிர்கொள்ளும் முயற்சியில் உருவானதுதான்ஒரு குழந்தை எப்படி இந்த உலகை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளைச் சிறிது சிறிதாக அறிந்துகொள்கிறதோ அதுபோலவே வெளிப்பாட்டின் பிரச்சினைகளை அறிந்துகொள்கிறேன்நடை என்பது என் கவிதைகளின் அதன் இயல்புகளின் சாராம்சமான தோற்றம்நவீன தமிழ்க் கவிதையின் பாசாங்கான பூடகத்தையும் இறுக்கத்தையும் என் கவிதைகள் தளர்த்த முயற்சித்திருக்கின்றனஉரையாடலின் சாத்தியங்களை அதிகமான கவிதைகளுக்குள் கொண்டுவருவதற்கு நான் மிகவும் பிரயாசைப்படுகிறேன்மேலும் பிரத்யேகமான அனுபவங்களைக் கவிதைக்குள் உருவாக்குவதில் எனக்கு நம்பிக்கையில்லைஅன்றாடம் நாம் எதிர்கொண்டு கடந்து செல்லும் அல்லது கடந்து செல்ல முடியாமல் தத்தளிக்கும் பொதுவான அனுபவங்களை நான் கவிதைக்குள் கொண்டுவருகிறேன்அதற்கு லகுவான ஒரு ரகசிய ஓசையை மறைத்து வைத்துக்கொண்டிருக்கக் கூடிய ஒரு மொழி நடை தேவையாக இருக்கிறது.


பல கவிதைகள் ஒரெ மொழிநடையைக் கொண்டிருப்பதுபோல தோன்றுகிறதே?


இதை நான் அடிக்கடி கேட்டிருக்கிறேன். கவிதைக்குக் கவிதை நடையை மாற்ற வேண்டும் என்கிறீர்களாஏற்கனவே சொன்னேன்நடைதான் என் இயல்பு என்றுநான் நான்கைந்து அடிப்படை கட்டுமானங்களைக் கவிதையில் பயன்படுத்துகிறேன்அதைத்தான் மாறி மாறிப் பிரயோக்கிறேன்சாத்தியமாகக் கூடியதும் அதுதான்கவித்துவத்தின் மன எழுச்சிக்கு ஏற்ப சில கவிதைகள் உயர்கின்றனசில தாழ்கின்றன.எனினும் காலப்போகில் என் கவிதைகள் சிறுகச் சிறுக மாறுதலடைந்து வந்திருக்கின்றனஇந்த உடல் மாறுவதுபோல.


ஒரு கவிதையை எங்கிருந்து தொடங்குகிறீர்கள்?


எங்கிருந்து வேண்டுமானாலும். எனக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு வாக்கியம் மட்டுமேஅது எங்கிருந்தாவது காற்றில் பறந்து வரும். ‘எல்லாவற்றிற்கும் பின்னே ஒரு கதை இருக்கும்’ என்ற வாக்கியம் சாதாரணமானதுஆனால் அந்த வாக்கியம் திடீரெனெ நம் மனதின் எல்லாத் தளங்களிலும் அதிரத் தொடங்கும்உண்மையில் அது ஒரு நிலநடுக்கம் போன்றதுஇவ்வாறு சாதாரண வாக்கியங்களைசாதாரண உண்மைகளை அசாதாரணமான எல்லைக்கு நகர்த்துவதே என் வழிமுறையாக இருக்கிறது.


எழுதும்போது உங்களை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள்?


கட்ந்த ஓராண்டாகத் தொடர்ச்சியாக கவிதைகள் எழுதி வருகிறேன்.கவிதைக்குள் தொடர்ச்சியாக இயங்குவது கடும் உடல்நலக் குறைவை ஏற்படுத்துகிறதுஎழுதுவது ஒரு வாதைசவுக்கின் ஓசை காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்தீவிரமான மன நிலைகளைத் தொடர்ந்து வாழ்வது நமது ஆயுளைக் கணிசமாகக் குறைக்கக்கூடியது என்று தோன்றுகிறது.



உங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த வெற்றியாக நீங்கள் எதைக் கருதுவீர்கள்?


வெற்றி தோல்விகளின் அபத்தங்களை நான் நிறைய பார்த்திருக்கிறேன்.இவ்வளவு நாள் இந்தப் பூமியில் இருக்க அனுமதிக்கப்பட்டிருக்கிறேனே இதுதான் நான் அடைந்த ஆகச் சிறந்த வெற்றிஎன் தகுதிக்கும் உழைப்புக்கும் மீறியே எனக்கு எல்லாம் நிறைய கிடைத்திருக்கின்றன.இதற்காக நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

00
    

Friday, March 19, 2010

செல்வாக்கு மிக்கவர்கள் : மனுஷ்ய புத்திரன் & நக்கீரன் கோபால்

தேசிய அளவிலும் தமிழகத்திலும் தங்கள் துறைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்டு தாக்கத்தை ஏற்படுத்திய செல்வாக்கும் மிக்கவர்களின் பட்டியைலை இந்தியா டுடே வெளியிட்டுள்ளது.

இப்பட்டியலில் கவிஞரும், உயிர்மை பத்திரிகை ஆசிரியர்-பதிப்பாளருமான மனுஷ்ய புத்திரன் மற்றும் நக்கீரன் ஆசிரியரும் பதிப்பாளருமான ஆர்.ஆர்.கோபால் இருவரும் முதன் முறையாக தேர்வு பெற்றுள்ளனர்.

பத்திரிகை & பதிப்பகம் சார்ந்து செயல்படுகிற இருவர் செல்வாக்கு மிக்கவராக அடையாளங் காணப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. தன்னுடைய கடும் முயற்சியினாலும், தளராத உழைப்பினாலும் இவ்விடத்தை பெற்றிருக்கும் மனுஷ்ய புத்திரன் மற்றும் நக்கீரன் கோபால் இருவருக்கும் அகநாழிகையின் வாழ்த்துகள்.


- பொன்.வாசுதேவன்


மனுஷ்ய புத்திரன்


நக்கீரன் கோபால்


Tuesday, March 9, 2010

உயிர்மை, காலச்சுவடு இதழ்களை புறக்கணிக்க வேண்டும்.




உயிர்மை, காலச்சுவடு போன்ற இதழ்களை படைப்பாளிகள் புறக்கணிக்க வேண்டும் - கவிஞர் விக்ரமாதித்யன்

தமிழ் படைப்புலகில் நிலவும் வறட்சியான விமர்சன சூழலைக் கவனப்படுத்தியும், கவனப்படுத்தாத படைப்புகளின் மீதான நேர்மையான விமர்சனங்களின் அவசியங்கருதியும் ‘சொற்கப்பல்‘ விமர்சன தளம் என்ற அமைப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

‘சொற்கப்பல்‘ அமைப்பின் அறிமுக விழா மற்றும் ‘விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களுக்குப் பாராட்டு விழா சென்னையில் மார்ச் 6 அன்று நடைபெற்றது. விருப்பு வெறுப்பற்ற விமர்சனங்களின் அவசியத்தையும், சொற்கப்பல் அறிமுகத்தையும் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் படைப்புகளின் மீதான விமர்சன நிகழ்வு ஒருங்கிணைக்கப்படும் என்பதையும் கூறி, பொன்.வாசுதேவன் வரவேற்புரை வழங்கினார்.

‘சொற்கப்பல்’ செயல்பாடுகள் பற்றியும்,விமர்சனங்களின் முக்கியத்துவம் குறித்தும் அஜயன்பாலா அறிமுகவுரையாகப் பேசினார். ‘விளக்கு’ விருது பெற்ற கவிஞர் விக்ரமாதித்யன் பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார்.

வாழ்த்துரை வழங்கிய கவிஞர் விக்ரமாதித்யன் பேசுகையில், "ஆதியில் ஓசையிலிருந்து பிறந்த மொழியானது பாடல்களாகி பின் உரைநடையாகியது. பின்னர் வசன கவிதை, நவீன கவிதை என அதன் நீட்சி ஏற்பட்டது. விமர்சனம் என்பது தற்போதைய சூழலில் போலியானதாக, தனிப்பட்ட விருப்புகள் சார்ந்தே இருக்கிறது. திரும்பத் திரும்ப குறிப்பிட்ட படைப்பாளிகளை முன்னிறுத்திப்பேசி தமிழில் வேறு படைப்பாளிகளே இல்லை என்பது போன்ற போலியான தோற்றம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பொய்த் தோற்றத்தை ஏற்படுத்தியதில் இலக்கிய இதழ்களின் பங்கு அதிகம். காலச்சுவடு, உயிர்மை போன்ற பத்திரிகைகள் தமிழ் இலக்கியத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதன் போக்குகளை நிர்ணயம் செய்கிற அதிகாரத்துடன் செயல்படுகின்றன.தி.மு.க. அல்லது அ.தி.மு.க. என அரசியலில் கட்சிகள் இருப்பது போலவே, இவ்விரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றைச் சார்ந்தே படைப்பாளிகளின், வாசகர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தமிழ்ப் படைப்பாளிகள் ஒன்று. காலச்சுவடு கட்சியைச் சேர்ந்தவராகவோ அல்லது உயிர்மையைச் சேர்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள். படைப்பாளிகளை சார்பு நிலையில் செயல்படச் செய்யும் இப்படியான இலக்கியப் போக்கு தொடர்வதை நாம் புறக்கணிக்க வேண்டும்" என்று பேசினார்.

தொடர்ச்சியாக, அமிர்தம் சூர்யா எழுதிய ‘கடவுளைக் கண்டுபிடிப்பவன்’ சிறுகதைத் தொகுதி மீதான வே.எழிலரசு அவர்களின் விமர்சனம் மற்றும் சந்திரா எழுதிய ‘காட்டின் பெருங்கனவு’ சிறுகதைத் தொகுதி பற்றிய அசதா மற்றும் காலபைரவன் ஆகியோரின் விமர்சன நிகழ்வும் நடைபெற்றது.விமர்சனத்தையொட்டி கேள்விகளும், உரையாடலும் நடைபெற்றது.

நிகழ்ச்சியின் நிறைவில் வேடியப்பன் நன்றியுரை வழங்கினார்.

அஜயன்பாலா, பொன்.வாசுதேவன் (அகநாழிகை), முகுந்த் (தடாகம்.காம்), வேடியப்பன் (டிஸ்கவரி புக் பேலஸ்) ஆகியோர் சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பிற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

- பொன்.வாசுதேவன்

(இப்பத்தி உயிரோசை இணைய இதழில் வெளியானது)

Monday, March 8, 2010

நித்யானந்தர் : சில குறிப்புகள்



மனுஷ்யபுத்திரன் பக்கங்களில் அவர் எழுதியிள்ள “நித்யானந்தர் : சில குறிப்புகள்“ என்ற பதிவு உங்கள் பார்வைக்கு....

1. நித்யானந்தர் சரஸ வீடியோ வெளிவந்த தினம் மக்களுக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் அதிர்ச்சி என்பது உண்மையில் ஒரு ’இன்ப’ அதிர்ச்சியா என்பது ஆராயப்படவேண்டும்.

2. .பி.எல். போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக நிறைய தமிழ்ப் படங்கள் அவசரமாகத் திரையிடப்படுவதைப் போலவே நித்யானந்தர் வீடியோவும் அவசரமாக வெளியிடப்பட்டிருகிறது என்று கருத இடம் இருக்கிறது. இல்லாவிட்டால் இதனுடைய டி.ஆர்.பி. ரேட்டிங் பாதிக்கப் பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது

3. Voyeurism என்பதற்கு ஒரு செய்தி மதிப்பினை வழங்கி அதன் மூலம் அதை ஒட்டு மொத்த சமூகத்தின் கூட்டு அனுபவமாக மாற்றிய சன் டி.வி குழுமம் தன்னளவில் ஒரு புரட்சியை நிகழ்த்தியுள்ளது. இதுபோன்ற புரட்சிகளை சமூகத்தின் எல்லா தளங்களிலும் இருக்கும் கபடவேடதாரிகள் தொடர்பாகவும் அது மேற்கொள்ளும் என்று நம்புவோம்.

4. வாய்வழி புணர்ச்சி தொடர்பாக தமிழ்ச் சமூகத்தில் நிலவும் மனத் தடைகளை ஒரே மூச்சில் களைந்த நக்கீரன் மற்றும் சன் குழுமம் மிகவும் பாராட்டிற் குரியவர்கள்.

5. நித்யானந்தர் சரஸ வீடியோ பற்றி ஊடகப் பழக்கமும் தொடர்பும் உள்ள அனைவருமே அநேகமாக கருத்துத் தெரிவித்துவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறந்துபோன ஒரு விஷயம், நித்யானந்தர் தான் ஒரு நடிகையுடன் படுக்க மாட்டேன் என்றோ ரஞ்சிதா தான் ஒரு சாமியாருடன் படுக்க மாட்டேன் என்றோ எந்த இடத்திலும் இதற்கு முன் அறிவிக்கவில்லை என்பதைத்தான்.

6. நித்யானந்தரை விமர்சிப்பவர்களில் பெரும்பகுதியினர் அவர்மேல் பொறாமை கொண்டவர்கள் என்று கருத இடம் இருக்கிறது.

7. சரஸத்தில் ஈடுபடும்போது நித்யானந்தர் டி.வி பார்க்கும் பழக்கம் உள்ளவர் என்று தெரிகிறது. இது பொதுவாக தமிழர்களின் பழக்கம்தான் என்று சமூகவியல் ஆய்வாளராக இருக்கும் எனது நண்பர் ஒருவர் குறிப்பிடுகிறார்.

8. இது ஹிந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்துவதாக நித்யானந்தர் ஆஸ்ரமங்களை எரிப்பவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஒரு பாதிரியோ அல்லது ஒரு முல்லாவோ இத்தகைய காரியத்தில் ஈடுபட்டால் அது கிறிஸ்தவர்களின் அல்லது முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்று அர்த்தமா? மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்துப் புண்படுவதுதான் நம்முடைய வேலையா? உதாரணமாக, ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளர் ஒரு பிரபல சினிமா இயக்குனரோடு சரஸமாடி அந்த வீடியோ காட்சியை வெளியிட்டால் அது தமிழ் இலக்கியத்தையோ தமிழ் சினிமாவையோ கேவலப்படுத்தியதாகிவிடுமா? அதற்காக ஒரு தமிழ் எழுத்தாளனாக இருப்பதற்காக நான் புண்படமுடியுமா?

9. நித்யானந்தரோடு சண்டையிடவேண்டியவர்கள் அவரது சீடர்களே தவிர,ஹிந்துக்களோ அல்லது பொதுமக்களோ அல்ல. ஒரு குடும்பத்தில் ஒருவர் சோரம்போவது எப்படி அந்தக் குடும்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினையோ,அதேபோலத்தான் ஒரு சாமியார் தான் பரப்பிய கொள்கைகளுக்கு எதிராக சோரம்போவது அவரைப் பின்பற்றுபவர்கள் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அவருக்குப் பணம் கொடுத்தவர்கள், அவரது காலைக் கழுவிக் குடித்தவர்களுக்கு மட்டுமே நித்யானந்தரைத் தண்டிக்கவோ மன்னிக்கவோ உரிமை உணடு. காமன் மேன்களோ அரசோ இதில் தலையிடுவது நியாயமே இல்லை.

10. ஒருவர் பிரம்மச்சரியத்தைப் போதிப்பதும் பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பதும் வேறு வேறு பிரச்சினைகள். மாபெரும் புரட்சிகளே தோல்வியடைந்துவிட்ட உலகத்தில் ஒரு இளைஞனின் பிரம்மச்சரியம் தோல்வியடைவது அவ்வளவு பெரிய பிரச்சினையா? போதனை என்பது ஒரு கருத்து. நித்யானந்தரின் தியானத்தைக்கூட எப்படி ஒருவர் எல்லா சந்தர்ப்பத்திலும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாதோ அதேபோல பிரம்மச்சரியத்தையும் முழுமையாகக் கடைப்பிடிக்க முடியாது.

11. நித்யானந்தரின் பிடதி ஆஸ்ரமத்தில் முதலில் சோதனையில் ஈடுபட்டவர்கள் வனத்துறை அதிகாரிகள். பெண் வேட்டையாடுபவர் என்று வர்ணிக்கப்படும் நித்யானந்தரின் ஆஸ்ரமத்தில் வனத்துறையினரை விட்டு சோதனையிட்டதன் மூலம் பெண்களை அரசாங்கம் விலங்குகளாகக் கருதுவதாக நம்ப இடமிருக்கிறது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

12. நித்யானந்தரின் சொத்துக்களின் மதிப்பு 5 ஆயிரம் கோடியிலிருந்து 10ஆயிரம் கோடி வரை என பத்திரிகைகள் மானாவாரியாகத் தகவல் கொடுக்கின்றன. ஒரு இளைஞனால் 32 வயதில் இவ்வளவு பணத்தையும் உலகளாவிய கட்டமைப்பையும் எவ்வாறு உருவாக்க முடிந்தது? பக்தர்கள் கொடுக்கிற காணிக்கையால்தான் இவ்வளவு பணம் சேர்ந்தது என்றால் பில் கேட்ஸ் போன்றவர்கள் நித்யானந்தரின் பகதர்களாக இருக்கிறார்கள் என்று அர்த்தமாகிவிடும். நித்யானந்தரின் கையில் இருக்கும் பணம் யாருடையது என்று தெரிந்தால் சரஸ வீடியோவின் ரிஷிமூலம் தெரிந்துவிடும்.

13. மடங்களுக்கும் சாமியார்களுக்கும் வரும் பணம் கணக்கிற்கும் கண்காணிப்பிற்கும் அப்பாற்பட்டது என்ற விதியின் மூலமாக ஸ்விஸ் பேங்க்கின் உள்ளூர் முகவர்களாக இதுபோன்ற சாமியார்கள் செயல்படுகிறார்கள் என்றுதான் அர்த்தம். இதில் ஏதாவது பிரசிச்னை வரும்போதோ, தில்லுமுல்லுவில் ஈடுபடும்போதோ அல்லது அரசியல் சூதாட்டங்கள் நடக்கும்போதோ இந்த சாமியார்கள் என்கவுண்டர் செய்யப்படுகிறார்கள். அரசியல்வாதிகள், பணக்காரகளுக்கு வேலை செய்யும் ரவுடிகளின் நிலைதான் இந்தச் சாமியார்களின் நிலையும்.

14. சாமியாரின் சரஸ வீடியோ தமிழர்களின் பாலுணர்வு சார்ந்த பழக்கவழக்கங்களை மிகவும் பாதித்திருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கெடுத்த அனைவருமே இந்த நாட்களில் பாலுறவில் ஈடுபடும்போது தாங்கள் ஒரு கேமிராவின் முன் நடிப்பதுபோல் உணர்வதாகக் கூறுகிறார்கள். விரைப்பு நிலையினைத் தக்க வைப்பதற்கான மருந்துகளின் விற்பனை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.

15. பிரபலமானவர்களின் பாலுறவுக் காட்சிகளை கோடிக்கணக்கான பார்வையாளர்களுக்குக் காட்டுவது சமூக ஒழுக்கத்தைக் காப்பாற்றுவதற்காக. முகம் தெரியாதவர்கள் நடிக்கும் பாலுறவுக் காட்சிகளைக் காட்டுவதுதான் ஒழுக்கக் கேடானது.

16. நித்யானந்தரின் படத்தைச் செருப்பால் அடிக்கும் காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டிக்கொண்டிருந்தார்கள். இந்தியர்களுக்கு ஒருவன் தலைவனாகவோ கடவுளாகவோ இருப்பதைப் போன்ற ஆபத்தான காரியம் இந்த உலகிலேயே வேறு எதுவும் இருக்க முடியாது.

17. இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை நித்யானந்தர் இவ்வளவு குறுகிய காலத்தில் கட்டி எழுப்பியது பல்வேறு தந்திரவேலைகள் இல்லாமல் சாத்தியமாகியிருக்காது. இவ்வளவு தந்திரமான ஒரு ஆளுக்குத் தனக்கு நெருக்கமான ஒருவரால்தான் படம் பிடிக்கப்படுவோம் என்று தெரியாமல் போய்விட்டது. நித்யானந்தருக்கு மட்டுமல்ல, வீழ்ச்சியடைந்த எல்லா மனிதர்களின் ஒரே பலவீனம் தன் உடன் இருப்பவரை நம்புவதுதான்.

18. .மதுரை தினகரன் அலுவலக எரிப்பையும் இதேபோலத்தான் திரும்பத் திரும்ப டிவியில் காட்டினார்கள். இறந்துபோன மூவரும் ஏசி மெஷின் கோளாறினால் ஏற்பட்ட தீவிபத்தில்தான் இறந்தார்கள் என்று ஒரு மாண்புமிகு நீதிபதி தீர்ப்பளித்தார். ரஞ்சிதா கால் இடறி நித்யானந்தரின் மேல் விழுந்ததைத்தான் தவறாகச் சித்தரித்துவிட்டார்கள் என்று யாராவது தீர்ப்பளிக்கக் கூடும்.

19. நித்யானந்தரின் சீடர்கள், கடவுள்மேல் மனிதர்கள் சொல்லக்கூடிய எந்தப் பழியையும் ஏற்கமாட்டார்கள். கடவுளை அடைவதற்கு பாலின்பமும் ஒரு மார்க்கமே என்று அவர் அறிவித்துவிட்டால் போதும். சீடர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகலாம்

20. பெரும் வர்த்தக நிறுவனங்கள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள் சேர்ந்து உருவாக்கும் இந்த கார்ப்பரேட் சாமியார்கள் ஒரு தவிர்க்க முடியாத சமூக விளைவு. பண முதலைகளுக்கு இவர்கள் தேவைப்படுவது போன்றே பற்றிக் கொள்ள ஏதுமற்ற எளிய மனிதர்களுக்கும் தேவைப்படுகிறார்கள்

21. தலைமறைவாக இருக்கும் நித்யானந்தர் பொழுதுபோகாததால் ‘பிரம்மச்சரியம் என்றால் என்ன?’ என்று விளக்கி தமிழ் இணையதளம் ஒன்றில் எழுதப்பட்ட நீண்ட கட்டுரையை ஆர்வமுடன் வாசித்து வருவதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தான் கைது செய்யப்படுவதற்குள் அதை வாசித்து முடிக்கவேண்டுமே என்று இரவு பகலாகத் தூங்காமல் இருக்கிறாராம். நித்யானந்தருக்குத்தான் சோதனை மேல் எத்தனை சோதனை.

மனுஷ்ய புத்திரன் பக்கங்கள்

Comments system

Disqus Shortname