சொற்கள் அழிந்து அம்மணமாய்க் கிடந்த
இளமிரவுப் பொழுதில்
சலனமேதுமற்று வந்து நின்றிருக்கிறது மொழி
உச்சமுற்றுப் புரண்டிருந்த சொற்களை
கருச்சுழலும் சிசுவாய்க் குழைந்து
யாசித்துத் துடிக்கிறது மொழி
எதிர்பாரா தருணத்தில்
மலர்ந்து கசிந்த யோனியின் வலியென
மறுதலித்து உதறிச் செல்கின்றன சொற்கள்
சமனில்லா மனதின் முன்
விழித்திருக்கின்றன
சொற்களும் மொழியும்
ரசிக்க ஆளற்றுப் பூத்திருக்கும்
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி.
சலனமேதுமற்று வந்து நின்றிருக்கிறது மொழி
உச்சமுற்றுப் புரண்டிருந்த சொற்களை
கருச்சுழலும் சிசுவாய்க் குழைந்து
யாசித்துத் துடிக்கிறது மொழி
எதிர்பாரா தருணத்தில்
மலர்ந்து கசிந்த யோனியின் வலியென
மறுதலித்து உதறிச் செல்கின்றன சொற்கள்
சமனில்லா மனதின் முன்
விழித்திருக்கின்றன
சொற்களும் மொழியும்
ரசிக்க ஆளற்றுப் பூத்திருக்கும்
வயலட் நிற எருக்கம் மலர்களின் மேல்
ஆறுதலாய்ப் பொழிகிறது முதிராத பனி.