Tuesday, December 30, 2008

வலை வீசி தேவதை


கண் முன் ஒரு தேவதை
அலைகளை
சேகரித்து வீசுகிறாள்
முகத்தின் மீது
கழுவிச் சலிக்கின்றன அலைகள்
அலை சூடிய முகடு
கடற்கரையில் செல்கிறேன்
இப்போது
வேறொரு தேவதை
கடற்காற்றில் வலை படபடக்க
வீசுகிறாள்
தப்பி ஒளிகிறேன் கடலுக்குள்
அலையையும்
வலையையும்
கடந்து முழ்கித் தேடுகிறேன்
மற்றுமொரு தேவதையை
(காயத்ரிக்கு...)

- பொன். வாசுதேவன்

"புதிய பார்வை" 16-31, 2007 இதழில் வெளியானது.

4 comments:

  1. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்

    பல விளக்கங்கள் எனக்கு ...

    உங்களின் நோக்கம் என்னவோ ...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname