Sunday, November 4, 2018

அகநாழிகை சிறுகதைகள்

‘அகநாழிகை’ முதல் இதழ் 2009ல் வெளியானது. 2017 வரை எட்டு இதழ்கள் மட்டுமே வெளிவந்துள்ளன. ஏழாவது இதழ் ஸ்டாலின் ராஜாங்கம், ஜோ டி குரூஸ் ஆகிய இருவரின் விரிவான நேர்காணல்களையும், பிற கட்டுரைகளையும் மட்டும் உள்ளடக்கியது. கவிதைகள், சிறுகதைகள் ஏழாவது இதழில் இடம்பெறவில்லை. 1 முதல்8 வரையிலான இதழ்கள் கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என படைப்பிலக்கியத்தின் அனைத்துப் பிரிவுகளையும் உள்ளடக்கியது.
அகநாழிகையின் முதல் இதழில் இருந்து எட்டாவது இதழ் வரை வெளியான சிறுகதைகளை இதழ்வாரியாகப் பட்டியலிட்டிருக்கிறேன். இப்போது பார்க்கும்போது ‘அகநாழிகை’ சிறுகதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. இதழில் சிறுகதைகளை எழுதியிருக்கிறவர்களும் சரியான தேர்வுகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். மொத்தம் 8 இதழ்களில் 42 சிறுகதைகள் வெளியாகியுள்ளது. ‘அகநாழிகை’ சிறுகதைகள் விரைவில் புத்தகமாக வெளிவர உள்ளது.
••

அகநாழிகையில் வெளியான சிறுகதைகளின் பட்டியல்
இதழ் 01
பூனைக்குட்டி - பாவண்ணன்
நீல ஊமத்தம் பூ - கெளதம சித்தார்த்தன்
கிறக்கம் - யுவன் சந்திரசேகர்
பாலை நில காதல் – எஸ்.செந்தில்குமார்
மழை புயல் சின்னம் - விஜய மகேந்திரன்
கிளி ஜோசியம் - யுவகிருஷ்ணா
ஓடும் குதிரைக்குப் பத்து கால்கள் - ரா.கிரிதரன்
இதழ் 02
இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் – கே.பாலமுருகன்
ரவிக்கையுள் மறையும் வனம் – லஷ்மி சரவணக்குமார்
கனவு கவிதை நான் – அதி பிரதாபன்
பால்ய நதி – சாரதா
சங்கமித்திரை – நிலா ரசிகன்
நத்தை – அ.மு.செய்யது
மூன்று கதைகள் - எட்கர் கேரத் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 03
ரெஜியின் பூனை – ரௌத்ரன்
கோழை – சாந்தன்
சஷ்மலின் வினோத இரவு – சத்யஜித்ரே – தமிழில்: நதியலை
பிண ஆய்வாளன் – கமலாதாஸ் – தமிழில்: தி.சு.சதாசிவம்
முதல் வேளை – மா ஃபெங் – தமிழில்: எஸ்.ஷங்கரநாராயணன்
இதழ் 04
அடைக்கலம் - பாவண்ணன்
போதி மரம் - ரிஷான் ஷெரிப்
உறவுகள் - ஐயப்பன் கிருஷ்ணன்
தலைமைச் செயலகத்தின் பின்புறம் ஆடுகள் மேய்கின்றன - அய்யப்ப மாதவன்
காக்கைச் சோறு - மதியழகன் சுப்பையா
இதழ் 05
சோழிகள் (குறுநாவல்) – விமலாதித்த மாமல்லன்
நீர்ச்சக்கரம் – விமலன்
ஹமீதாக்கா – கார்த்திகா வாசுதேவன்
சூரியக் குடை – தாரா கணேசன்
வித்தை – விநாயகமுருகன்
இன்னும் உறங்குதியோ – யுகமாயினி சித்தன்
செஷிர் பூனை – அண்டானியோ தபூக்கி – தமிழில்: நாகரத்தினம் கிருஷ்ணா
இதழ் 06
மாசு மருவற்ற வெளி – வாமு கோமு
வாக்குமூலம் – பரமிதா சத்பதி (ஒரியா) – தமிழில்: சித்தன்
பூமராங் – ரிஷான் ஷெரிப்
வெயிற்பந்தல் – ராகவன் சாம்யேல்
ஈஸ்வர வடிவு – இந்திரா பாலசுப்ரமணியன்

இதழ் 07
சிறுகதைகள் வெளியாகவில்லை.
இதழ் 08
கீர்த்தியின் அப்பா - கலைச்செல்வி
மாயம் - ஜீ.முருகன்
துளிர்தல் உதிர்தல் - ந.அருண் பிரகாஷ்ராஜ்
கிடாய் - அனோஜன் பாலகிருஷ்ணன்
தற்செயலாய் பறிக்கப்பட்ட ஒரு மலர் - பொன்.வாசுதேவன்
மிக இரகசிய இயக்கம் - தருமு பிரசாத்
•••

Comments system

Disqus Shortname