நண்பர்களுக்கு,
வணக்கம். மதுரை புத்தகக் கண்காட்சி செப்டம்பர் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.
மதுரை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் ‘உயிர்மை‘ புத்தக அரங்கில் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடான சி.சரவணகார்த்திகேயன் எழுதிய ‘பரத்தை கூற்று‘ கவிதைத் தொகுதியும் மதுரை புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு கிடைக்கும். இப்புத்தக வெளியீட்டு விழா குறித்து விரைவில் அறிவிக்கப்படும்.
பரத்தை கூற்று (கவிதைகள்) - சி.சரவணகார்த்திகேயன்
வெளியீடு : அகநாழிகை
விலை : ரூ.50/-
அகநாழிகை பதிப்பக வெளியீடுகள்
1. கருவேல நிழல் (கவிதைகள்) பா.ராஜாராம் - ரூ.40/-
2. கோவில் மிருகம் (கவிதைகள் - என்.விநாயகமுருகன் - ரூ.40/-
3. நீர்க்கோல வாழ்வை நச்சி (கவிதைகள்) - லாவண்யா சுந்தரராஜன் - ரூ.40/-
4. கூர்தலறம் (கவிதைகள்) - டிகேபி காந்தி - ரூ.40/-
5. உறங்கி விழித்த வார்த்தைகள் - மதன் - ரூ.40/-
6. தலை நிமிர்வு (கவிதைகள்) - ரூ.40/-
7. பரத்தை கூற்று - சி.சரவணகார்த்திகேயன் - ரூ.50/-
8. அய்யனார் கம்மா (சிறுகதைகள்) - நர்சிம் - ரூ.40/-
9. கலைஞர் என்னும் கலைஞன் (கட்டுரைகள்) - டி.வி.இராதாகிருஷ்ணன் - ரூ.20/-
(நயினார் பதிப்பகம்)
10. தொலைக்கப்பட்ட தேடல்கள் - வெ.இராதாகிருஷ்ணன் - 100/- (நயினார் பதிப்பகம்)
.......................................................................................................
அகநாழிகை பதிப்ப வெளியீடுகளை
ஐசிஐசிஐ வங்கிக்கணக்கு எண் 155501500097 -
P.VASUDEVAN - MADURANTAKAM BRANCH
வழியாக பணம் செலுத்தியும் பெறலாம்.
.......................................................................................................
அகநாழிகை பதிப்பக வெளியீடுகள் கிடைக்கும் புத்தக கடைகள்
சென்னை : நியூ புக்லேண்ட்ஸ், தி.நகர் & டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே.நகர்.
மதுரை : பாரதி புக் ஹவுஸ் (பெரியார் பேருந்து நிலைய உட்புறம்)
*****************************************************************************
உங்களது படைப்புகளை நேர்த்தியாக வடிவமைத்து சிறந்த முறையில் புத்தக வடிவாக்கம் செய்துதர எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
எழுத : aganazhigai@gmail.com & nayinarbooks@gmail.com
Showing posts with label நயினார் பதிப்பகம். Show all posts
Showing posts with label நயினார் பதிப்பகம். Show all posts
Wednesday, August 25, 2010
Thursday, July 22, 2010
தொன்மத்தில் துளிர்க்கும் வாழ்வின் விதை
டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் தனது ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘ சிறுகதைத் தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரை.
காலம் காலமாக நடந்து வரும் இந்த இயற்கையான விசயத்திற்கு இறைவன் எனப் பெயரிட்டு, நமது நம்பிக்கைகளை வளர்த்துக் கொண்டு ஒரு கட்டுக்கோப்பாக வாழ வேண்டியதன் அவசியத்தை உணர்த்திட நாம் நினைத்தது எத்தனை தவறாகிவிட்டது. ஒன்றாய் நிற்க வேண்டிய நாம் பிரிந்து கிடக்கிறோம். எண்ணங்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன. இதில் யார் பெரியவர், யார் சிறியவர் எனும் சச்சரவு நீங்கியபாடில்லை. ஒருவருக்கு ஒருவர் எதிராக செயல்படுவதும், அடுத்தவர் எப்படி போனால் நமக்கு என்ன என்ற குறுகிய மனப்பான்மையும் வந்து சேர்ந்துவிட்டது.
இதற்காக இறைவன் எந்த பொறுப்பும் ஏற்றுக் கொள்ள மாட்டார், நாம்தான் பொறுப்பினை உணர்ந்து செயல்பட வேண்டும். இனி எவரும் வந்து பாவ புண்ணியங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கப் போவதில்லை, ஒருவேளை ஒருவர் அப்படி தோன்றினாலும் நின்று கேட்டு நிற்கும் நிலையில் எவரும் இல்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்துவிட்டது.
என்னவெல்லாம் மாற்றங்கள் நேர வேண்டுமென ஒவ்வொருவரும் மனதில் நினைக்கின்றோமோ, அந்த மாற்றங்களை நம்மில் ஏற்படுத்த வேண்டிய காலத்தின் கட்டாயம் இது. எத்தனையோ விசயங்கள் நம்மை பாதித்துக் கொண்டு இருக்கின்றன. நம்மைப் பார்த்துத்தான் நமது சந்ததியினரும் வளர்ந்து வருவார்கள்.
ஒற்றுமையை குலைக்கும் வண்ணம் நாம் இத்தனை காலமும் செயல்பட்டு இருப்பதும், இனியும் செயல்பட்டு வருவதும் நமது மனித குலத்திற்கே பெரும் அச்சம் விளைவிக்கும் செயலாகும். போராட்டங்களும், அழிவுகளுமே கண்டு பழகிப் போன பூமியிது, எத்தனையோ நல்ல விசயங்களை மறந்து போன பூமி இது. அனைத்து ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்வு சரியாக இருக்கும் என தவறான கண்ணோட்டத்தில் வாழப் பழகி விட்டோம். எந்த ஒரு கொள்கையும் ஏற்புடையதாக இல்லை. நமது வாழ்க்கை முறை மிகவும் கேலிக்குரியதாக இருக்கிறது.
அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு உழைப்பாளரை அவமானப்படுத்த நான் தயாராக இல்லை. சமத்துவம் தொலைந்து போன பூமியில் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது என எனது கண்களை மூடிக்கொண்டு இருக்கவும் எனக்கு சம்மதம் இல்லை.
ஒரு விசயத்தின் அடிப்படையில் ஒன்று சேரும் மனிதர் கூட்டம், அந்த விசயம் முடிந்து போனதும் விலகிப் போகும்! எந்த அடிப்படையை வைத்து மனிதரை ஒன்று சேர்க்க நினைத்தோமோ அந்த அடிப்படை இப்பொழுது ஆட்டம் கண்டு தவிக்கிறது. மனிதரின் பண்பு நலன்கள் என எதுவுமே அவசியமற்றுப் போனது. தெரிந்தே தவறு செய்து விட்டோம், தவறு எனத் தெரிந்தும் இதுதான் சரி என நமக்குள் நாம் சொல்லிக்கொள்ளும் முட்டாள்தனமான நிலை இருந்து வருகிறது. இதை தனிமனிதரின் பார்வையிலிருந்து சொல்கிறேனே தவிர இதைச் சொல்ல தகுதியிருக்கும் நிலையில் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொள்வது நல்லதாகும். 'போனது போய்விட்டது, இனி பகுதி போனால் என்ன, முழுமை போனால் என்ன' என்ற நிலையை அடைந்து விட்டோம்.
இதில் கலியுகம் என்று வேறு கூறிக்கொண்டு திரிகிறோம். கலிகாலம் இப்படித்தான் இருக்கும் என யார் உங்களுக்கு சொன்னது? பல வருடங்களுக்கு முன்னால் எதிர்மறையாக சிந்திக்கத் தெரிந்த ஒருவரின் கருத்தை எப்படி உங்களால் ஏற்று கொள்ள முடிகிறது.
நம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை! இதற்கு அர்த்தம் என்றாவது யோசித்து வைத்தது உண்டா?
தனிமனித உணர்வுகளை உதாசீனப்படுத்துவதாக நினைக்கும் ஒவ்வொருவரும் எண்ணிப்பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருப்பது உண்மையான உணர்வுகளை சிதைப்பது எனத் தெரியவில்லையா? 'எங்களால் முடிந்ததை செய்து வருகிறோம், எழுதத் தெரியும் என்பதற்காக எதையும் எழுதுவது அழகல்ல' எனச் சொல்லிக்கொண்டேயிருங்கள். எந்த மாற்றமும் இதுவரை நிகழ்ந்தது இல்லையே, என்ன முடிந்ததை செய்தீர்கள்? இப்படித்தான் எழுதிக் களித்திருந்தோம், படிப்பவரின் எண்ணத்தை சுயமாக எண்ணவிடாமல் கிழித்திருந்தோம். 'போன கதை போகட்டும், இனிமே என்ன செய்யறதுனு சொல்லு' இப்படி கேட்டு கேட்டே சொல்ல வருபவரை சோர்வடையச் செய்யும் மகாபாவத்தை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.
இனி எப்படி விதை விதைப்பது? எந்த மரபணுவில் எந்த நோய் இருக்கிறது என அடையாளம் கண்டு கொள்வது? இதுதான் வாழ்க்கை, இப்படித்தான் இருக்கும், எல்லாம் அவன் செயல் என வாழ்ந்து முடித்து விடலாமா? இப்படித்தான் பல தேடல்கள் தொலைக்கப்பட்டு விட்டன. தொலைக்கப்பட்ட தேடல்களை தேடுவதை அவசியமாக்கிவிட வேண்டியே ஒரு சிறு பயணம் இது.
- வெ.இராதாகிருஷ்ணன்
...................................................................................................................................
டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘தொலைக்கப்பட்ட தேடல்கள்‘
புத்தக வெளியீட்டு நிகழ்வு
குறிப்பு :
இந்த சிறுகதைத் தொகுப்பு 24.7.2010 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு அண்ணா யுனிவர்சிட்டி அலுமினி கிளப், ஹெக்டே ஹாலில் நடைபெற உள்ளது.- புத்தக வெளியீட்டு விழாவில் ரூ.100/- மதிப்புள்ள இந்த புத்தகம் 50% சிறப்பு சலுகையில் ரூ.50/-க்கு கிடைக்கும்.
- புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கின்ற அனைவருக்கும் டாக்டர் வெ.இராதாகிருஷ்ணன் எழுதிய ‘நுனிப்புல்‘ (பாகம் - 1) என்ற சிறுகதைத் தொகுப்பு இலவசமாக வழங்கப்படும்.
அனைவரும் வருக !
- பொன்.வாசுதேவன்
Subscribe to:
Comments (Atom)

