Saturday, December 27, 2008

பொம்மை விளையாட்டு

பிசைந்தெடுத்து வழிய விடுவாய்
அன்பற்ற இறுக்கத்தை
இரைச்சல்களற்று
எல்லாம் உறங்கும்
இரவின் விளிம்பில் அமர்ந்து
காத்திருந்த நீ
என் மேல்
இப்போதும் ஒரு கணம்
படரும் ஒசையெனக்கு
கேட்கிறது சுவாசமாய்
சருமம் கருக
நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
உருகி வழிந்து ஓயும் ஊற்றாய்
களைத்துறங்குகிறாய்
ஒரு சொல் இல்லை
மொழிகளுக்கப்பாற்பட்டு அதிரும் ஓசை
உள் பேசும் நான்
மின்னலாய் தோன்றுமொரு யோசனை
பாய்ந்து வெளிப்பட்டாலென்ன
அறுந்து சுருண்டு
கவிழ்ந்து படுக்கும் நான்
களைத்து குழந்தையாகியுறங்கும்
உன் முதுகு பார்த்து...
- பொன்.வாசுதேவன்

" புதிய பார்வை " ஆகஸ்ட் 16-31, 2007- ல் வெளியானது.

5 comments:

  1. வரிகளும் - புகைப்படமும் அருமை...

    ReplyDelete
  2. அருமையான கவிதை அகநாழிகை.."நிரப்பவியலா பள்ளத்தாக்கில்
    உருகி வழிந்து ஓயும் ஊற்றாய் // மற்றும்/ உள் பேசும் நான்/ மிகவும் ரசித்த வரிகள்.புகைப்படமும் அருமை...
    வாழ்த்துக்கள்தோழர்.

    ReplyDelete
  3. ஜமால், உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...!

    ReplyDelete
  4. thank u for your wishes and wishing u a prospereous new year 2009.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname