Saturday, October 22, 2011

அடைக்கலம்




ஒருவரையொருவர் அடைகாத்தபடி
அரவணைத்தலில்
இருப்பதையே நாம் விரும்புகிறோம்

அன்பின் அதீதத்தில்
திளைக்கிறோம்
அணைப்பு அவசியமாகி விடுவதால்
வேறெதிலும் இல்லாத
பாதுகாப்புணர்வை நாம் பெறுகிறோம்

அணைத்தலில் விலகுகிறது
பயம்

உலர்ந்த மார்புக் காம்புகளில்
உதடுகளின் ஈரம் நெகிழ்த்துவதைப்போல
ஒரு அணைப்பு
போதுமானாதாயிருக்கிறது
எல்லாவற்றுக்கும்

அதிருப்தி
கோபம்
நியாயம்
ஒழுங்கு
எல்லாவற்றையும்
சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு

அணைத்திருப்பதிலிருந்து
விலகியிருப்பதாய் தோன்றும்
கணங்களில்
பேசும் எல்லாமே
கசப்பானதாயிருக்கிறது

*

பொன்.வாசுதேவன்

2 comments:

  1. //அணைத்திருப்பதிலிருந்து
    விலகியிருப்பதாய் தோன்றும்
    கணங்களில்
    பேசும் எல்லாமே
    கசப்பானதாயிருக்கிறது// ஆமாங்க பல நேரம் இப்படி தான் தோன்றுகிறது..

    ReplyDelete
  2. //அதிருப்தி
    கோபம்
    நியாயம்
    ஒழுங்கு
    எல்லாவற்றையும்
    சரி செய்து விடுகிறது ஒரு அணைப்பு

    அணைத்திருப்பதிலிருந்து
    விலகியிருப்பதாய் தோன்றும்
    கணங்களில்
    பேசும் எல்லாமே
    கசப்பானதாயிருக்கிறது//

    உண்மைதான் கவிஞரே
    சிறந்த அழகிய கவிதை

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname