Monday, December 29, 2008

மிதந்து கொண்டேயிருக்கும் வலை



அடர் மழை மௌனமாய்

யாருக்கும் தெரியாமல்

இறங்கும் வேலையில்

உயிர்ச்சுழி தேடிப் பரவுகிறது

நீ வீசிய வலை

விழி தீண்டும் தூரம் அறியாது

அப்பிக்கிடக்கிறது இருள்

வெடிக்காத இசையின்

அரூப ஒலியாய்

காத்திருக்கிறது

வலை வருடிய கைகள்

தனியுச்சியில் புதையுண்டு

தருணம் நோக்கி

காத்திருக்கிறேன்

வலைக்குள் உன்னை இருத்த.


- பொன். வாசுதேவன்


"புதிய பார்வை" ஆகஸ்ட் 16-31, 2007 இதழில் வெளியானது.

3 comments:

  1. \\"மிதந்து கொண்டேயிருக்கும் வலை"\\

    உலா வரும் வலை

    ReplyDelete
  2. \\காத்திருக்கிறேன்
    வலைக்குள் உன்னை இருத்த.\\

    எங்களை இருத்திவிட்டீர்கள் சிறுது நேரமேனும் உங்கள் வலையில்.

    ReplyDelete
  3. நன்றி ஜமால், உங்கள் மனதில் சிறு சலனமேனும் என் கவிதை ஏற்படுத்தியிருந்தால் மகிழ்ச்சிதான்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname