Sunday, December 14, 2008

உனக்காக ஒரு கவிதை

அன்பின் தடம் பல தேடியலைந்து
கூடடைந்தேன் சிலகாலம்
எண்ணங்களில் மிதந்த
உன் வசீகர ஆசைகளும்
மொட்டவிழ்ந்து
கரை சேர்ந்த நேரம் அது
பேசி முடித்த கணத்திலிருந்து
அடுத்த ஆரம்பத்தை எதிர்நோக்கி
விடிந்த பொழுதுகள்
புன்னகை விளையும்
விழிகளின் நொடிகளுக்கு காரணமாய்
தொடர்ந்தன நினைவுகள்
பறவையின் காலடி தேடும்
வான்வெளி விளையாட்டாய்
முளைத்தெழுந்தன
நமக்கான நட்சத்திரங்கள்
தீண்டாமல் நீ தந்த வெதுவெதுப்பில்
இதயம் உறங்கச் சென்ற நாட்கள் பல..
நான் உனக்கானவன் இல்லை
நீ எனக்கானவள் இல்லை
நீ இருக்கிறாய்
நானும்...
வளராதிருக்கும்வரை
வலைகளின் இடுக்கில் கசிந்து
தப்பியோடும் சிறு மீன்களின்
குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
இறுக்கி விரல்களுக்குள்
கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
மாலையாக....

- பொன். வாசுதேவன்


5 comments:

  1. தலை சுத்துதுங்க.. நீங்க எல்லாம் பின்நவீனத்துவ வாதியா????ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. கவிதை நல்லாருக்கு. சிறு புன்னகை முகிழ்வதை தவிர்க்க இயலவில்லை...
    //வளராதிருக்கும்வரை
    வலைகளின் இடுக்கில் கசிந்து
    தப்பியோடும் சிறு மீன்களின்
    குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
    இறுக்கிய விரல்களுக்குள்
    கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
    சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
    மாலையாக....//

    மிக அற்புதமான வரிகள் அவை...அன்பிற்கும் காதலுக்கும் நட்பிற்கும் இடையே ஊசலாடும் ஆண் பெண் உறவுகளை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த நாள் இந்தக் கவிதையுடன் தான்....

    ReplyDelete
  3. கவிதை நல்லாருக்கு. சிறு புன்னகை முகிழ்வதை தவிர்க்க இயலவில்லை...
    //வளராதிருக்கும்வரை
    வலைகளின் இடுக்கில் கசிந்து
    தப்பியோடும் சிறு மீன்களின்
    குதியாட்டமாய் படர்கிறது சந்தோசம்
    இறுக்கிய விரல்களுக்குள்
    கனவுப்பூக்களை சேமித்துக் கோர்த்து
    சூடிகொள்கிறேன் எனக்குள் உன் நினைவுகளை
    மாலையாக....//

    மிக அற்புதமான வரிகள் அவை...அன்பிற்கும் காதலுக்கும் நட்பிற்கும் இடையே ஊசலாடும் ஆண் பெண் உறவுகளை மிகத் துல்லியமாக எழுதியிருக்கிறீர்கள். இந்த நாள் இந்தக் கவிதையுடன் தான்....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname