Monday, May 3, 2010

சொற்கப்பல் (விமர்சன தளம்) அன்புடன் அழைக்கிறது

நவீன இலக்கிய சூழலில் பதிப்பக மைய அரசியலின் பிடிகளை தளர்த்தவும் , புதிய ஊற்றுகண்களை வளப்படுத்தவும், அடைப்புகளை சீர் செய்யவும், வாழ்வாங்குவாழ நவீன தமிழை முன்னெடுத்துசெல்வதற்குமாக ஆரம்பிக்கப்பட்ட சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பு கடந்த கூட்டங்களை சென்னையில் சிறப்பாக நடத்தியிருக்கிறது. 


கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு ஆகியவற்றின் மீதான விமர்சனக் கூட்டங்களை, விவாத அரங்குடன், கவிஞர் விக்ரமாதித்யன், கூத்துப்பட்டறை முத்துசாமி போன்ற மூத்த படைப்பாளிகளின் முன்னிலையில் சொற்கப்பல் நடத்தியுள்ளது.


சொற்கப்பல் விமர்சன தளத்தின் அடுத்த நிகழ்வாக அண்மைய நாவல்கள் குறித்த விமர்சனக் கூட்டம் சேலத்தில் நடைபெற உள்ளது. இலக்கிய ஆர்வலர்கள் பங்கேற்று சிறப்பிக்க இருக்கும் நிகழ்ச்சியில் தங்களையும் அன்புடன் அழைக்கிறேன்.


சொற்கப்பல் (விமர்சன தளம்) மற்றும் ‘தக்கை‘ இணைந்து நடத்தும்
நாவல் விமர்சன அரங்கு

நாள் : 8.5.2010 சனிக்கிழமை காலை 9.30 - 5.00 மணி
இடம் : சிவகாமி அம்மையார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அம்மாப்பேட்டை, சேலம்.
------------------------------------------------------------------------------

காலை 9.30 மணி

வரவேற்புரை :
‘தக்கை‘ வெ.பாபு

துவக்கவுரை :
ஈசன் இளங்கோ

தலைமையுரை :
சுப்ரபாரதிமணியன்

------------------------------------------------------------------------------------------

காலை 10 - 1 மணி

நாவல் விமர்சன அரங்கு

அமர்வு : 1

கருத்துரையாளர்கள் : தமிழ்நதி, சந்திரா

நாவல் & ஆசிரியர்............................................................. விமர்சனம்

1. தாண்டவராயன் கதை - பா.வெங்கடேசன்................................. ஸ்ரீநேசன்
....
2. நிலாவை வரைபவன் - கரிகாலன் .............................................. அசதா

3. சாந்தாமணியும் இன்ன பிற காதல்களும் - வாமுகோமு ....... சாகிப்கிரான்

பகல் 2 - 5

அமர்வு : 2

கருத்துரையாளர்கள் : தாராகணேசன், மோகனரங்கன்

4. துருக்கி தொப்பி - கீரனூர் ஜாகிர் ராஜா ................................ இளங்கோ கிருஷ்ணன்

5. வெட்டுப்புலி - தமிழ்மகன் ....................................................... பைத்தியக்காரன் (சிவராமன்)

6. நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன் ............................... ச.முத்துவேல்

------------------------------------------------------------------------------------------

நன்றியுரை : 
அமுதரசன் (தடாகம்.காம்)

பங்கேற்பாளர்கள் : 
அஜயன்பாலா சித்தார்த், கண்டராதித்தன், அய்யப்ப மாதவன், பால்நிலவன், காலபைரவன், யாத்ரா மற்றும் பலர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : 
பொன்.வாசுதேவன் (அகநாழிகை)
தக்கை வெ.பாபு

தொடர்புக்கு : 
பொன்.வாசுதேவன் - 999 454 1010 / தக்கை வெ.பாபு - 96009 53007

அனைவரும் வருக !

சொற்கப்பல் (விமர்சன தளம்) அமைப்பாளர்கள்

அகநாழிகை - தமிழ்மகன் - தடாகம்.காம் - டிஸ்கவரி புக் பேலஸ்




3 comments:

  1. pakirvukku nantriyum vaazhthukalum......:)

    ReplyDelete
  2. நான் வருகிறேன்

    ReplyDelete
  3. தொடக்கத்தில் எல்லாம் சரியாகத்தான் போகும்... அப்புறம் பாருங்க எவனாவது உள்ளே நுழைந்து அல்லது நுழைய முடியாமல் போகும் பொழுது குழப்படி பண்ணி (பன்னி) உங்களை எங்கேயோ கொண்டு போய் நிறுத்துவார்கள் பாருங்கோ நீங்களே ஆச்சரியப் பட்டுப் போய் விடுவீர்கள். வாழ்த்துக்கள்....

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname