Saturday, April 10, 2010

கடவுள் இறந்துவிட்டார்



வெகுநேரமாக வெயில் புணர்ந்து
உச்சப் பரவசம் அடைந்திருந்த
அறைச்சுவர்கள் வெம்மையைப்
பிரசவித்துக் கொண்டிருந்தன

சுழன்று கொண்டிருந்த
மின் காற்றாடி நின்றுபோன
எதிர்பாராத தருணத்தில்
வந்தது அந்தக்கடிதம்

பிரமை குறித்தான
யோசனையில் ஆழ்ந்திருந்த
எனக்கு நடுக்கத்தைக் கொடுத்தது
அந்தக் கடிதம்

நிச்சயம் அதில்
நல்ல சேதியாகத்தான்
இருக்க வேண்டும்

கைகள் நடுங்க உதடுகள் உலர
கடித உறையின் முனைகளை
பதமாக கிழிக்கிறேன்

பதட்டத்தில் சற்றே கோணலாகி
உள்ளிருந்து என்னைப்பார்த்து
சிரிக்கிறது கடிதம்

பிரித்துப் படிக்கத் தொடங்குகிறேன்
ஆம்
எதிர்பார்த்தது போலவே
நல்ல சேதிதான்
கடவுள் இறந்து விட்டாராம்

எல்லை மீறிய மகிழ்ச்சியின்
கொண்டாட்டத்தில்
துள்ளியெழுகிறேன் படுக்கையிலிருந்து

மின் காற்றாடி சட்டென்று
சுழலத் தொடங்குகிறது
அறைச்சுவர்கள்
குளிர்ந்து விட்டன

கடித உறையை கிழித்தபோது
துண்டாகிப் போன
அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
துடித்துக் கொண்டிருக்கிறது
குற்றுயிராய்.

- பொன்.வாசுதேவன்

19 comments:

  1. m......
    nallaayirukku!

    //
    மின் காற்றாடி சட்டென்று
    சுழலத் தொடங்குகிறது
    அறைச்சுவர்கள்
    குளிர்ந்து விட்டன

    கடித உறையை கிழித்தபோது
    துண்டாகிப் போன
    அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
    துடித்துக் கொண்டிருக்கிறது
    குற்றுயிராய்.
    //

    ippadi mudichchathu nantru:)

    ReplyDelete
  2. அன்பு வாசு,

    ரொம்ப பிடிச்சிருந்தது இந்த கவிதை... அஞ்சல் தலையில் கிழிந்த பறவை பாடாய் படுத்துகிறது... கடைசி வரிகள்.... அபாரம். கடவுள்கள் மரித்த பிறகு தான் கவிதை பிறக்கிறது... ஆனால் பறவை குற்றுயிராய் போனது கவிஞனுக்கு தெரிகிறது, மரித்துக் கொண்டு இருப்பதும் கடவுள் தானா வாசு??? குழைத்து குழைத்து பிதுக்கி பிதுக்கி செய்த களிமண் சிற்பம், கையெல்லாம் ரத்தமான ரத்தம், விணைப்பயன் என்று சிரிக்கிறார் கடவுள்... அகம் பிரம்மாஸ்மி!!!

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete
  3. அழகிய பொய்களாலான கவிதை. நல்லாயிருக்கு.

    ReplyDelete
  4. இப்படித்தான் தோன்றுகிறது பல நேரங்களில்.

    ReplyDelete
  5. :) last lines with ur stamp!!

    ReplyDelete
  6. ரொம்ப நல்லாருக்கு வாசு.

    // மரித்துக் கொண்டு இருப்பதும் கடவுள் தானா வாசு???//

    அருமை ராகவன்.

    ReplyDelete
  7. இறுதி வரிகள் எனக்கு பிடிச்சிருக்கு.

    ReplyDelete
  8. God died on 14.5.2009:
    when tamil community cried for help,God didn't respond....
    so,God died on May 14th,2009

    ReplyDelete
  9. கடவுளை மரிக்கச்செய்து காகிதப் பறவைக்கு உயிர்க்கொடுத்து வலி உணர்ந்த விதம் அருமை....

    ReplyDelete
  10. sir..
    ungalin 2 visayankalukku naan vilakkam yen thalathileye koduththullen.

    ithu pola periya aatkalukkellaam pathil sonnathillai..athuve konjam nadukkamaayirukkirathu.

    antha nadukaththudan sonna pathilil yethaavathu pizhai iruppin perithu paduththa venaamnga sir!

    m..
    aganazhikai-na yenna arththam sir?
    athai appadiye piriththu porul yeduththukkanumaa sir?

    ReplyDelete
  11. ஒரு நல்ல கவிதையாகியிருக்கும் - செதுக்கியிருந்தால் ... தேவையில்லாத வார்த்தைகள் கவிதையின் கச்சிதத்தையும் தீவிரத்தையும் குறைக்கின்றன ...

    //

    வெகுநேரமாக வெயில் புணர்ந்து
    உச்சப் பரவசம் அடைந்திருந்த
    அறைச்சுவர்கள் வெம்மையைப்
    பிரசவித்துக் கொண்டிருந்தன

    //

    இதை

    ”வெய்யில் வன்புணர்ந்த அறைச்சுவர்”

    என்றால் ஆகாதா ...

    ReplyDelete
  12. கடித உறையை கிழித்தபோது
    துண்டாகிப் போன
    அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
    துடித்துக் கொண்டிருக்கிறது
    குற்றுயிராய்.---//

    ரொம்ப நல்ல பஞ்ச்... நன்றி வாசு

    ReplyDelete
  13. வார்த்தைகள் வலிந்து திணிக்கப்பட்டு எழுதப்பட்ட கவிதையாக தெரிகிறது

    ReplyDelete
  14. ஆஹா !
    அருமையான பதிவு!!

    ReplyDelete
  15. //அஞ்சல் வில்லைப் பறவை மட்டும்
    துடித்துக் கொண்டிருக்கிறது
    குற்றுயிராய்.//

    க‌ட‌வுள் இற‌ந்த கார‌ண‌மாக‌ இருக்க‌லாம்

    ReplyDelete
  16. கிழிக்கப் பட்ட அஞ்சல் வில்லையில் இருந்த பச்சை குருவிக்கு பிறச்சேர்க்கைகள். இன்னும் யாரு தபால் அனுப்புறாங்க உங்களுக்கு ?!!!!!!
    நல்லாத்தான் இருக்கு. எப்போதும் போல படமும் அருமைங்க.

    நிறைய இருக்கு கைவசம் என்றே தெரிகிறது. வர வர மொட்டை படம் போட்டு பதிவே வரதில்லையே? டெம்பிளேட்டை மாற்றிக் கொண்டே இருக்கிறீர்களே!! :)

    ராகவா! களை கட்டுது!!! போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ... :))

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname