Thursday, December 31, 2009

புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள்


33ஆவது சென்னை புத்தக கண்காட்சி 30.12.09 முதல் 10.1.2010 வரை

சென்னையில் நடைபெறவுள்ளது.

இடம் : செயிண்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி

(பச்சையப்பன் கல்லூரி எதிரில்)

விடுமுறை தினங்களில் காலை 11 மணிமுதல் இரவு 8.30 வரை

மற்ற நாட்களில் மதியம் 2.மணிமுதல் இரவு 8.மணி வரை

இந்த ஆண்டும் சென்னை புத்தக கண்காட்சிக்கு அகநாழிகை பதிப்பகம் ஒன்பது புதிய நூல்களைக் கொண்டு வருகிறது.

புதிய எழுத்துக்களை அடையாளப்படுத்தும் விதமாக இணையம் மற்றும் சிற்றிதழ்களில் சிறப்பாக கவனம் பெற்று எழுதிவரும் படைப்பாளிகளான பா.ராஜாராம், நர்சிம், என்.விநாயகமுருகன், லாவண்யா சுந்தரராஜன், டிகேபி காந்தி, மதன் ஆகியோரது புத்தகங்களுடனும், ஏற்கனவே சிறப்பான எழுத்துகளின் வழியே அறியப்பட்டுள்ள வளர்மதி, பாரதிவசந்தன் ஆகிய படைப்பாளிகளின் படைப்புகளுடனும் இந்த புத்தக கண்காட்சியில் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு கிடைக்கும்.

புத்தக கண்காட்சியில் சிறப்புச் சலுகை விலையில் அகநாழிகை வெளியிட்டுள்ள நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

அகநாழிகை இதழின் ஆண்டுச் சந்தா கண்காட்சியில் பதிவு செய்பவர்களுக்கு ரூ.150 மட்டும்.

அகநாழிகையின் வாசகர்களோடும், இணைய எழுத்தாள நண்பர்களோடும் சந்தித்து உரையாடும் வாய்ப்பையும் புத்தக கண்காட்சி அளிப்பது மகிழ்வுக்குரியது.

கண்காட்சி நாட்களில் நண்பர்கள் என்னை இந்தத் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். 999 454 1010

அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் கீழ்க்கண்ட ஸ்டால்களில் கிடைக்கும்.
........................................................................................................................

உயிர்மை அரங்கு எண்.12

பரிசல் புத்தக நிலையம் அரங்கு எண்.386

இருவாட்சி பதிப்பகம் அரங்கு எண்.121

மற்றும் பல அரங்குகளிலும் அகநாழிகை வெளியீடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
.........................................................................................................................

1. கருவேல நிழல் - பா.ராஜாராம் (ரூ.40)

2. கோவில் மிருகம் - என்.விநாயகமுருகன் (ரூ.40)

3. நீர்க்கோல வாழ்வை நச்சி - லாவண்யா சுந்தரராஜன் (ரூ.40)

4. கூர்தலறம் - டிகேபி காந்தி (ரூ.40)

5. அய்யனார் கம்மா - நர்சிம் (ரூ.40)

..........................................................................................................................

புத்தக கண்காட்சியில் சிறப்பு விலையாக ரூ.35 க்கு கிடைக்கும்.

ஐந்து புத்தகங்களும் சேர்த்து விலை ரூ.175

..........................................................................................................................


உறவும் நட்புமாக அனைவரும் வருக !

- பொன்.வாசுதேவன்

12 comments:

  1. வாழ்த்துகள் வாசு.

    கண்காட்சியில் சந்திப்போம்.

    ReplyDelete
  2. நிச்சயம் எல்லா புத்தகங்களும் வாங்கிவிடுவேன். :)
    அகநாழிகை இன்னும் நிறைய புத்தகங்கள் வெளியிட வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. மிக்க மகிழ்ச்சி வாசுதேவன்.

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்........

    ReplyDelete
  5. வாழ்த்துகள் வாசு சார்..

    ReplyDelete
  6. ஆன் தி வேல இருக்கோங்க...!!!

    ReplyDelete
  7. வாழ்த்துகள் வாசு சார்

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் வாசு,,,,

    ReplyDelete
  9. கலக்குங்க வாசு சார்!

    ReplyDelete
  10. புத்தகக் கண்காட்சியில் விற்பனை வெற்றி பெற நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் அகநாழிகை! முயற்சிகள் தொடரட்டும். ஆங்கலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. தாமதமான வாழ்த்துகள் எனினும் தொடர்ந்து சாதனை படைக்க வாழ்த்துகள்.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname