Tuesday, March 12, 2013

உற்று நோக்கியபடியிருக்கிறது காலம்



முடிவடையாத காலத்தின் துணுக்குகளில்
நுண்ணணுவாய்ப் பிணைந்திருக்கும்
சதை இரத்தம் காற்றுக் கலவை நம் உயிர்

கிடந்தழுத்தும் பிரியச் சேறில்
இணைந்து பிணைந்து
ஐயக் கேவலுற்று சண்டையிட்டழுது
கண்ணீரிட்டுக் கதறி மீண்டு
மீண்டும்
இணைந்திணைந்து தொடர்ந்து
பெருவரியோடிய நதிக் கோடுகளாய்
முற்றுப்பெறாதொரு வாழ்வெளியில்
ஜென்மங்கடத்தி
பார்க்காத கணத்தில் உருகி
பார்த்த கணத்தில் கண்ணீர்ப் பெருக்குற்று
தழுவிக் கடத்தி விலகிச் சென்று
தனித்திருக்கும் தொலைவுகளுக்கப்பால்
அடர் நினைவுகளுடன் பிடிப்பும் பற்றுமாய்
சேர்ந்து உயிர்த்திருக்கும் நம்மை
உற்று நோக்கியபடியிருக்கிறது காலம்
மௌனமாய்.


பொன்.வாசுதேவன்

3 comments:

  1. ரொம்ப அழகான கவிதை.. மனசுக்குள் ஏதெதோ பேசிக் கொண்டிருக்கிறது இந்தக் கவிதை என்னுடன்..

    ReplyDelete
  2. கிடந்தழுத்தும் பிரியச் சேறில்
    இணைந்து பிணைந்து///அருமை

    ReplyDelete
  3. Thalaiva..... Just love it...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname