Wednesday, December 26, 2012

ஸ்ரீ சக்ரபுரி - ஸ்வாமி ஓம்கார்

இறையின்பம் திகட்டாத பேரின்பம் என்பது ஆன்மீகர்களின் அனுபவம். முழுமையான வாழ்வின் ஒரு நிமிடத்தின் புகைப்படம் எப்படி பல்வேறு கடந்தகால நிகழ்வை கிளர்ச்சியடைய செய்யுமோ அது போன்று ஒவ்வொரு கணமும் இறையனுபூதி பொழிந்தாலும் அதில் ஒரு கணத்தின் நிகழ்வை மட்டும் எடுத்துக்கொண்டு ரசிப்பது என்பது சுவாரசியமானது.

ஸ்ரீ சக்ரபுரி என்ற இந்த புத்தகம் இத்தகைய சுவாரசியம் வாய்ந்தது. தினம் தினம் நாம் பார்க்கும் ஒரு விஷயம் சாதாரணமாக தெரிந்தாலும் அதன் பின்னணியில் பெரும் ஆன்மீக சக்தி இருக்கலாம். அது போன்று திருவண்ணாமலை என்ற இடம் பலருக்கு சாராசரியான ஒரு வழிபாட்டு தலம். ஆனால் அது ஆன்மீக தேடல் கொண்டவருக்கு அள்ள அள்ள குறையாத ஆன்மீக சுரங்கம்.

ஞானப் பெருவெளியில் ஆன்மீகம் சுவைப்போர்க்கு மேலும் ஆழ்ந்த உணர்வூட்ட ஸ்வாமிஜியால் வெளிப்பட்டது ஸ்ரீ சக்ரபுரி. தன்னகத்தே பல்வேறு ஆன்மீகக் கருத்துகளை வைத்திருந்தாலும் அது பாமரனுக்கும் புரியச் செய்யும் ஆற்றல் சிலருக்கே உண்டு. ஸ்வாமி ஓம்கார் அவர்களின் விளக்கத்துடன் பயணிக்கும் பொழுது திருவண்ணாமலையின் ஒவ்வொரு சதுர அடியையும் ரசித்து மகிழலாம்.







வெளியீடு : அகநாழிகை பதிப்பகம்
விலை : :ரூ.100

தொடர்புக்கு : aganazhigai@gmail.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname