Thursday, March 17, 2011

பாதத்தில் கிடந்த முத்தம்



செய்வதற்கு வேலைகளுள்ள
இந்த அபூர்வ தினத்தில்
சிலந்தியின் மென்னிழையாக
ஒழுங்கற்று உமிழ்ந்து
உருப்பெற்றுக்கொண்டிருந்தது அது

நினைவுகளில் பிணைந்த உன்னை
வலியச் சென்று
நசுக்கும் யோசனைகளையெடுத்து
நகர்கிறது பொழுது

முன்னிரவு
பின்னிரவு
காலை பகல் மாலை
என நினைவுலாவிக்
கொண்டிருக்கும் வேளையில்
உன் பாதங்களைப் பற்றிய
எண்ணம் விழித்துக் கொள்கிறது

இதன் அர்த்தமின்மையைப் பேசும்
உன்னிடம்
அதற்கான சமாதானங்களைச்
சொல்ல முற்படுகையில்
முடிந்து விட்டிருக்கிறது
இன்றைய தினம்.

*

பொன்.வாசுதேவன்

3 comments:

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname