Tuesday, April 20, 2010

சாத்தானின் தாசியன்




ஆம்
இன்றைக்கு எப்படியாவது
கடவுளைக் கொன்றுவிட 
திட்டமிட்டிருக்கிறேன்

இனியும் பொறுமையில்லை
முழுமையாக உதிர்ந்து விட்டன
சகிப்புத்தன்மையின் செதில்கள்

வந்துவிட்டார் கடவுள்
எதிர்பார்த்த தருணம் நெருங்கிவிட்டது
பின்புறமிருந்து முகத்தில் 
துணியைப் போர்த்தி
வசமான பிடியுடன் இறுக்குகிறேன்

திமிறிக் களைத்து தோற்று
உடல் தளர்ந்து பிரிகிறது
கடவுளின் உயிர்

குரூரத் திருப்தியோடு கோரப்பற்களில்
வழியும் இரத்தத்தை சுவைத்தபடி
தொலைவில் வந்து பார்க்கிறேன்

தகன மேடையில் யாரோ
கிடத்திக் கொண்டிருக்கிறார்கள்
எனது உடலை.

- பொன்.வாசுதேவன்

11 comments:

  1. நல்ல கவிதை

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  2. nallaayirukku..............

    thalaipputhaan puriyala.

    ReplyDelete
  3. romba nalla irukku satreyana athirvudan

    ReplyDelete
  4. க‌ட‌வுளை கொன்று உங்க‌ளை கிட‌த்தி, நீங்க‌ள் உங்க‌ளை க‌ட‌வுள் என்கின்றீர்க‌ளா?

    ReplyDelete
  5. உங்களிடம் உள்ள நல்ல குணத்தை கடவுள் னு சொல்றீங்கன்னு நினைக்கிறேன். சரியா? அது தானே நம் இஷ்டப்படி நடக்க விடாமல் தடுக்கிறது

    ReplyDelete
  6. அழுத்தமான பதிவு..

    ReplyDelete
  7. kavithai arumai anna,
    melum nalam ariya aaval.

    anbudan
    ursularagv

    ReplyDelete
  8. நல்ல கவிதைங்க. கடவுள்களை எத்தனை முறை கொன்றாலும் சாவதில்லை. ஏனெனில் யாரும் கடவுளைக் காணவும் முடிவதில்லை.

    ஆனாலும் தற்கொலை ஒரு கோழைத்தனமான செயல்தான்.

    அன்புடன்
    ஆதவா

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname