Sunday, February 14, 2010

சொல்ல இருக்கிறது காதல்



நூற்கண்டின் முனையெனப் பற்றி
சூரியக்கதிர்களை
இழுத்தோடும் ரயிலொன்றின்
ஜன்னலோர இருக்கையில்
என்னோடு பயணப்படுகிறது
உன் நினைவுகள்

போதையுண்ட எதிர்காற்று
அலைக்கழித்த
என் கண்ணிமைகளை
மூடித்திறக்கையில்
அனிச்சையாய்
பூரித்துப் பூக்கிறாய் நீ
விழியோர நீர்த்துளிகளாய்

பெருந்தாகத்துடன்
குடிப்பதற்காய்
உயர்த்திக் கவிழ்த்த
பிளாஸ்டிக் குவளை நீரின்
பதற்றத்தோடு
உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
உன் பிரியத்தின் அழுத்தங்கள்

இருட்டத் தொடங்கியதன்
அவதானிப்பில்
வேகமாய்க் கூடடையும்
பறவையின் அவசரத்துடன்
எனக்கு நானே
சொல்லிக் கொள்கிறேன்
எனக்கும்
காதல்
இருந்தது
இருக்கிறது
இருக்கும்
இவ்வாறெல்லாம்.

- பொன்.வாசுதேவன்

25 comments:

  1. மறக்க முடியாத காதல், துக்கம் நெஞ்சை அடைக்கும் படி எண்ண அலைகள் ஓடி கொண்டிருக்கும்... நல்ல ஆளுமையுள்ள கவிதை வாசுதேவன். வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. கவிதை அருமை சார்.

    ReplyDelete
  3. //பிளாஸ்டிக் குவளை நீரின்
    பதற்றத்தோடு
    உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
    உன் பிரியத்தின் அழுத்தங்கள் //

    காதலின் அழுத்தம் தெரிக்கும் கவிதை..

    ReplyDelete
  4. மிகவும் அருமை, யோசித்து பார்க்க முடியா ஒப்பீடுகள்...class!!

    ReplyDelete
  5. //பூரித்துப் பூக்கிறாய் நீ
    விழியோர நீர்த்துளிகளாய்//

    அருமை.

    ReplyDelete
  6. நல்லாருக்கு!

    ReplyDelete
  7. butterfly Surya said...
    I love you Vasu..

    me too vaasu!

    ReplyDelete
  8. இது போதுமே ...வேறென்ன வேண்டும்?

    ReplyDelete
  9. வாசு அண்ணா உங்கள் கவிதைகளைப் படிச்சு ரசிக்க மட்டுமே முடிகிறது.விமர்சனம் செய்ய என்ன இருக்கு.அவ்ளோ ஆழமாயிருக்கும் எப்பவும்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வாசு கவிதை அருமை - என்ன சொல்வது

    ReplyDelete
  11. கவிதை அழகு

    வாழ்த்துக்கள்

    விஜய்

    ReplyDelete
  12. Supper... vasu, I love this one :)

    ReplyDelete
  13. அருமையான பகிர்வு வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  14. கவிதை மிக அருமையாக இருக்கிறது...

    ReplyDelete
  15. கவிதை ரொம்ப நல்லாருக்கு வாசு சார் .

    ReplyDelete
  16. கவிதை மிக அருமை.

    //நூற்கண்டின் முனையெனப் பற்றி
    சூரியக்கதிர்களை
    இழுத்தோடும் ரயிலொன்றின்
    ஜன்னலோர இருக்கையில்//

    ரசித்தேன்.

    ReplyDelete
  17. க‌விதை ந‌ன்று வாழ்த்துக‌ள்

    ReplyDelete
  18. //நூற்கண்டின் முனையெனப் பற்றி
    சூரியக்கதிர்களை
    இழுத்தோடும் ரயிலொன்றின்
    ஜன்னலோர இருக்கையில் //
    நல்லப் புதிய உவமை...

    ReplyDelete
  19. 'அவதானிப்பில்' என்றால் ?

    ReplyDelete
  20. இந்தக் கவிதை காதலில் இருந்தவன் , இருப்பவன் , இருக்கப்போபவன்.. அனைவருக்கும் பொருந்துகிறது...

    அருமை.. புதிய முயற்சி!!

    ReplyDelete
  21. ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.உங்கள் கவிதைக்கணைகள்.

    ReplyDelete
  22. remba pidichchirukku..........

    ReplyDelete
  23. போதையுண்ட எதிர்காற்று
    அலைக்கழித்த
    என் கண்ணிமைகளை
    மூடித்திறக்கையில்
    அனிச்சையாய்
    பூரித்துப் பூக்கிறாய் நீ
    விழியோர நீர்த்துளிகளாய் //

    மிக அழகான கற்பனை....

    பெருந்தாகத்துடன்
    குடிப்பதற்காய்
    உயர்த்திக் கவிழ்த்த
    பிளாஸ்டிக் குவளை நீரின்
    பதற்றத்தோடு
    உள் நிரம்பி நெஞ்சடைக்கிறது
    உன் பிரியத்தின் அழுத்தங்கள் //

    அருமையான வார்ப்பு....
    மிக அழகு உங்கள் கவிதை...

    ReplyDelete

உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ள...

Comments system

Disqus Shortname